districts

img

மதுரையில் ஆயுதங்களுடன் கும்பல் தாக்கியதில் வாலிபர் பலி

மதுரை, மே 5-  மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டதாரி இளை ஞர் சூர்யா (23), கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியைக் காண தனது நண்பர்களுடன் வெள்ளி யன்று அதிகாலை 4 மணிக்கு ராமராயர் மண்டகப்படி அருகே நின்றுள்ளார்.  அப்போது அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயு தங்களுடன் வந்த கும்பல் சூர்யா மற்றும் அவரது நண்பர்களைத் தாக்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். மேலும் அவரது நண்பர்கள் சிலரும் பலத்த காயமடைந்தனர்.  சம்பவ இடத்துக்குச் சென்ற மதிச்சியம் காவல் துறையினர் சூர்யாவின் சட லத்தை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். மேலும் காயமடைந்த நண்பர் களை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர்.  சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் மதிச்சியம் காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல் கண்டுகொள்ளாத காவல்துறை  இதேபோல ஆயுதங்க ளுடன் சுற்றிய கும்பல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கூடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டு ஆயுதங்களால் தாக்கியதில் அப்பகுதியைச் சேர்ந்த தேநீர்க்கடை ஊழி யர் உள்பட மூவர் காயம டைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மேலும் எதிர்சேவை நிகழ்ச்சியில் மதுபோதை யில் ஆயுதங்களுடன் வந்த வர்கள் மோதலில் ஈடுபட்ட தில் இதுவரை 16 பேர் பலத்த காயமடைந்து,   அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கத்திக்குத்து காய மடைந்த ஒருவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படு கிறது. எதிர்சேவை நிகழ்ச்சி யில் பங்கேற்ற இளைஞர்க ளில் பலர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டும், கடைகளை சூறையாடியும், பொதுமக்களை தாக்கி விட்டும்  சென்ற நிலையில் காவல்துறையினர்  அவர் களை கட்டுப்படுத்த எவ்வித  நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படு கிறது.  நெல்பேட்டையில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் சுற்றி  வந்தது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பல மோதல் சம்பவங்கள் ஏற் பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.