சிவகங்கை,அக்.7- காரைக்குடி புத்தகக் கண்காட்சியில் மாணவர்களுக்காக “ என்ன படிக்கலாம். எங்கு படிக்கலாம்” என்ற சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கல்வியாளர் கலைமணி மாணவர்களு டன் உரையாற்றி மாணவர்களின் கேள்வி களுக்கு பதில் அளித்தார். புத்தகம் ஒரு போதிமரம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் தமுஎகசவின் கவி ஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர். புத்தகக் கண்காட்சிக்கு காரைக்குடி தொழில்அதிபர் சித்திரவேலு, புதுக் கோட்டை மாவட்ட ஆதிதிராவிட நல அலு வலர் கருணாகரன் மற்றும் அறிஞர்கள், பேராசிரியர்கள், புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தினம்தோறும் வருகை புரிந்து புத்தகங்களை வாங்கிச் செல்வ தாக புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பா ளர்கள் தெரிவித்தனர்.