மதுரை, ஜூன் 24- அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களைக் காப்போம் என்ற முழக் கத்துடன் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மதுரையில் இன்று சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. அரசே, ஆலயங்களை விட்டு வெளி யேறக்கூடாது. தனியார் கொள்ளையிலி ருந்து, ஆர்.எஸ்.எஸ். மதவெறியிலிருந்து கோவில்களை காக்க வேண்டுமென வலியுறுத்தி. ஆர்எஸ்எஸ் கும்பல்களால் கோவில்களுக்கு வந்திருக்கும் பேரா பத்தை அம்பலப்படுத்துவதோடு மக்களி டம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சிறப்பு மாநாட்டை மதுரையில் ஜூன் 25 அன்று நடத்துகிறது. திருப்பரங்குன்றம் சாலை, பசுமலை யில் உள்ள கோபால்சாமி திருமண மண்ட பத்தில் மாலை 5 மணிக்கு மாநாடு நடை பெறுகிறது. இந்த மாநாட்டை தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மதுரை மாநகர்-புற நகர் மாவட்டக்குழுக்கள் இணைந்து நடத்துகின்றன. மாநாட்டிற்கு ஒருங்கி ணைப்பாளர் என்.ஜெயச்சந்திரன் தலை மை வகிக்கிறார். வே.உமாமகேஸ்வரன் வரவேற்புரையாற்றுகிறார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்புரையாற்றுகிறார். தமிழ் சைவ பேரவைத் தலைவர் மா.கலையரசி நடராஜன், மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பி னர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), எம். பூமிநாதன் (மதுரை தெற்கு), காங்கி ரஸ் மாவட்டத் தலைவர் வீ.கார்த்தி கேயன், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராம லிங்கம், மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (ஓய்வு) பொ.ராமராஜ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் என்.குகசீல ரூபன் ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர். மாநாட்டுத் தீர்மானங்களை இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர் முன்மொழிகின்றனர். எஸ்.விவேகானந்தன் நன்றி கூறுகிறார்.