விருதுநகர், ஆக.14- அருப்புக்கோட்டை அருகே உள்ள புளி யம்பட்டியில் விவசாயிகளுக்குச் சொந்த மான நிலங்களில் தனியார் சோலார் நிறுவனம் அனுமதியின்றி மின் கம்பங்கள் ஊன்றி சாலை அமைக்கும் பணியைச் செய்து வருவதாகக் கிராம மக்கள் ஆட்சி யரிடம் புகார் மனு அளித்தனர். மனுவில், “அருப்புக்கோட்டை வட்டம், பெரிய புளியம்பட்டி மேற்குக் காட்டில் விவசாய நிலங்கள் உள்ளன. அதில், கஷ்டப் பட்டு விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில், தனியார் சோலார் நிறுவனத்தி னர் எங்களின் அனுமதியின்றி மின் கம்பங்கள் ஊன்றியுள்ளனர். மேலும் மின் வடங்களை இழுப்பதற்கு ஏதுவாக சாலை அமைக்கவும் முயன்று வருகின்றனர். எனவே, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.