districts

img

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்துப் போராட்டம்

சாத்தூர், மார்ச் 6- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய  பாஜக அரசு, தொடர்ந்து  சமையல் எரி வாயு விலையை உயர்த்தி வருகிறது. விலை  உயர்வை ரத்துச் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் சாத்தூர் முக்கு ராந்தலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் எம்.சாராள் தலை மை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே. விஜயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மனோஜ்குமார், சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். திண்டுக்கல் திண்டுக்கல்லில் மாதர் சங்கம் சார்பாக சிலிண்டரில் ஒலி எழுப்பும் நூதன போராட்டம் நடைபெற்றது.  தலைமைத் தபால் அலு வலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி.ராணி, மாவட்டச் செயலாளர் வே.பாப்பாத்தி, தங்கமணி, ஆர். வனஜா, பாக்கியம், மைதிலி, ஷோபா, ஜெயந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.