districts

img

நடுவகுறிச்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

விவசாயிகள் மாநாடு கோரிக்கை தென்காசி, ஜூலை 10- தமிழ்நாடு விவசாய சங்க தென்காசி மாவட்டம் சங்க ரன்கோவில் தாலுகா மாநாடு  நடைபெற்றது. மாநாட்டிற்கு வெள்ளத்துரை தலைமை தாங்கினார். மாநாட்டை தூக்கி வைத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண் ணன் பேசினார். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெருமாள் பேசினார்.  தலைவராக வெள்ளத் துரை, செயலாளராக ராம சாமி ,பொருளாளராக ராஜ துரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 11 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை வாழ்த்தி தமிழ் நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் கணபதி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்க டேஷ், சிபிஎம் நகர செயலா ளர் அசோக் ராஜ் பேசினர். முருகன் வேல்சாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர் விவசாயிகளுக்கான உரம், தட்டுப்பாடு இல்லா மல் கிடைத்திட வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பென்ஷன் மற்றும் நடுவகுறிச்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்திடவேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.