districts

img

சமூகப்போராளிக்கு நினைவரங்கம்: சிபிஎம் வரவேற்பு!

சென்னை, ஏப்.18- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் 1924 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி பிறந்தவர் எல்.இளையபெருமாள். பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அவர், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் என்ற பெருமையை பெற்ற வர். நாடாளுமன்ற உறுப் பினராகவும் 20 வருடங்கள் பணியாற்றியவர். சென்னை  எழும்பூர் தொகுதியில்  இருந்து தேர்ந்தெடுக்க ப்பட்டு சட்டமன்றத்தில் பணியாற்றிய அவர், 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி மறைந்தார். இந்நிலையில், பட்டிய லின மக்களின் முன்னேற் றத்துக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத் தில் நூற்றாண்டு நினைவு அரங்கு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இந்த அறிவிப்பை வர வேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகைமாலி,“ இந்திய நாட்டின் பட்டியலின மக்க ளுக்கு சட்ட ரீதியாக ஏராள மான பிரச்சனைகளை உரி மைகளை பெற்றுக்கொடுத்த வர் இளையபெருமாள்.  பட்டியலின பழங்குடி மக்களின் மேன்மைக்காக உருவாக்கப்பட்ட அகில இந்திய ஆணையத்தின் தலைமை பொறுப்பை ஏற்று,  தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் துன்பங்களையும் அந்த மக்கள் அனுபவித்து வந்த கொடுமைகளையும் வெளிக் கொண்டு வந்து பல்வேறு சட்டங்களை கொண்டு வரச் செய்து அந்த  மக்களின் வழிக்காட்டியாக திகழ்ந்த இளைய பெருமா ளின் பணிமகத்தானது” என்றார். அவை முன்னவர் துரை முருகன், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், மு.பெ.சாமி நாதன், ப.தனபால் (அதிமுக), செல்வப்பெருந் தகை(காங்.), ஜி.கே.மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), சிந்தனைசெல்வன் (விசிக), சதன்திருமலைகுமார் (மதிமுக), டி.ராமச்சந்திரன் (சிபிஐ), எம்.எச்.ஜவாஹி ருல்லா,ஈஸ்வரன், வேல் முருகன், ஜெகன்மூர்த்தி ஆகியோரும்  வரவேற்று பேசினர்.