மாதர் சங்க ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் ஆர்.கஸ்தூரி நினைவு தினம் செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. போடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மூத்த தலைவர் கே.ராஜப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன், தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் மீனா, மாதர் சங்க தாலுகா செயலாளர் சுதா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முனீஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர் கணேஷ்ராம், பேரா.செளகத் அலி, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.