districts

img

வள்ளலார் 200 ஆண்டு பிறந்தநாள் அரசு சார்பில் தேனியில் முப்பெரும் விழா

தேனி, ஏப்.2-  இந்து சமய அறநிலை யத்துறையின் சார்பில் தேனி யில்  வள்ளலார் 200 ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு  முப்பெரும் விழா ஞாயி றன்று நடைபெற்றது.  முப்பெரும் விழாவை  முன்னிட்டு நடைபெற்ற திரு வருட்பா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு  மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களையும், சன்மார்க்கச் சான்றோர்களுக்கு பாராட் டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளையும்  மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.ஜெயபாரதி வழங்கினார்.   இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் பா.பாரதி மற்றும் சுத்த சன் மார்க்க அன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.