districts

img

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த  வெடி விபத்தில் 6 பேர் கோரமாகப் பலியாகினர். சம்பவ இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.பாலா, எஸ். கே.  பொன்னுத்தாய் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செ.முத்து ராணி, தா. செல்லக்கண்ணு, வி.பி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி, கிளைச் செயலாளர் குருசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் அழகுசிறை கிராமத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.