பட்டாசு ஆலையில் தீ விபத்து அறைகள் சேதம்
வெம்பக்கோட்டை, ஏப்.3- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே தனி யார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை கள் சேதமாகின. வெம்பக்கோட்டை அருகே உள்ள கங்கர்செவல்பட்டி யில் தனியாருக்கு சொந்தமான தங்கவேல் சக்கரவர்த்தி பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர், இந்நிலையில், திங்களன்று காலையில் தொழிலா ளர்கள் பணிக்கு வரும் முன்பு.பட்டாசு தயாரிக்கத் தேவை யான மூலப்பொருட்கள் உள்ள அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது, இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீய ணைப்பு வீரர்கள், ஆலையின் பிற பகுதிகளுக்கு பரவி விடாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசார ணையில் அதிக வெப்பம் காரணமாக மூலப் பொருட்கள் வெடித்துள்ளதாக தெரிய வந்தது. மேலும். இந்த விபத்து குறித்து வெமபக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் மழைமானி அமைக்க கோரிக்கை
ஒட்டன்சத்திரம், ஏப்.3- ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் மழை அளவை அறிந்துகொள்ள மழைமானி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவடடம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்திரப்பட்டியில் மழைமானி வைத்து மழை அளவீடு செய்யப்படுகிறது. இதனால், ஒட்ட்னச்திரம் மற்றும் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் துல்லி யமான மழையளவு பதிவுசெய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிகளவில் மழை பெய்தாலும் இப்பகுதியில் மழை யில்லை என்றே பதியப்படுகிறது. இதனால், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் மழை அளவைக்கொண்டு, அதற்கேற்றவாறு சாகு படி உள்ளிட்ட இதர பணிகளை செய்ய முடியாத நிலை யில் உள்ளனர். எனவே சுற்றுப்புற கிராமங்களில் விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் ஒட் டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் மழைமானி நிறுவ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.