மயிலாடுதுறை, ஜன.12 - மக்கள் கூடும் இடங்க ளுக்கு தாமாகவே சென்று தனது சொந்த செலவில் முகக் கவசங்களையும், கிருமிநாசினியும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் விவசாயி ஒருவர். மயிலாடுதுறை மாவட் டம், தரங்கம்பாடி வட்டம், கொத்தங்குடி ஊராட்சிக்குட் பட்ட ஐவேலி கிராமத்தை சேர்ந்த விவசாயியான பன்னீர்செல்வம், மக்கள் கூடும் இடங்களான அங்காடி, கோவில்கள், கிராம நிர்வாக அலுவல கம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு முகக் கவசங்களையும், கிருமிநாசினிகளையும் வாங்கிக்கொண்டு தாமாகவே கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். “விவசாயிகள் சங்கம் ஒன்றின் தலைவராக உள்ள இவர், தனது பழுதடைந்த மிதிவண்டியில் சென்றவாறு பிறருக்கு உதவுவதிலேயே அதிகம் செலவு செய்து வருவதாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று கிருமிநாசினி தெளிப்பது, பாடல்கள் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்களை இடை விடாது தொடர்வதாகவும், இதுவரை 40 ஆயிரம் ரூபாய் சொந்த பணத்தை செலவு செய்தும் சோர்வடையாமல் மக்கள் பணியை தொடர்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர். தள்ளாத வயதிலும் பிறருக்கு உதவுவதுதான் தனக்கு நிம்மதியை தருவதாக கூறும் முதியவரான விவசாயி பன்னீர்செல்வத்தின் செயல்கள் சிலருக்கு வேடிக்கையாக இருந்தாலும் அவரின் பணி வியப்புக்குரியது”.