districts

img

தங்கம், வெள்ளி, வெண்கலம் என 40 பதக்கங்கள் குவித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கை நிறைவேறுமா?

மதுரை, அக்.17 - ‘‘மதுரை மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்கத்தில் சேர்ந்து, இன்று தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ள சங்கீதாவின் திறமையை வெளிக்கொணர்ந்தது மதுரை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தான். இவருக்கு ஏதா வது வேலைவாய்ப்புக் கிடைக்க முதல்வர் வரை  முயற்சி செய்துகொண்டிருக்கிறது இந்த அமைப்பு’’

- நக்கீரன்

“செலவுகளுக்கு சங்கீதா அன்பானவர் களையே சார்ந்துள்ளார். அவர் சொல்கிறார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பாராட்டு மழைக்கு ஏற்பாடு செய்து, இயன்ற அளவில் எனக்கு உதவுகிறது”

- இந்து ஆங்கில நாளேடு

யார் இந்த சங்கீதா... மதுரை தெற்குமாடவீதி அருகிலுள்ள கூடலழகர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவர் மதுரை மாவட்டம் மட்டுமல்ல, தமிழக  அளவில் விளையாட்டுப்போட்களில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றவர். உலக அளவில இந்தியா விற்காக லண்டன், துபாய், சீனா, ஜோர்டன் ஆகிய  நாடுகளில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ், குண்டு  எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போன்ற விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளார். ஒட்டு மொத்தத்தில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என  40 பதக்கங்களை வாங்கிக் குவித்துள்ளார். மேல்நிலைக் கல்வி முடித்த இவர் கூட்டுறவு பட்டயப் பயிற்சி முடித்துள்ளார். திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது கணவரின்  சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வரு கிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 19-ஆவது சர்வ தேச தடகளப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணமூர்த்தி,  கே.சா.முத்துவேல், ஜி.விஜயசாரதி, ஜெ.அனு ராதா, எம்.அன்னலட்சுமி, ஆர்.ராஜலெட்சுமி மற்றும் இவரும் பங்கேற்று திரும்பினர். தொடர்ந்து   2009-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது இன்றைய முதல்வரும் அன்றைய துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் உடனி ருந்தார். அன்றைய தினம் முதல்வரிடம் தமக்கு அரசு வேலை வழங்கவேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களில் ஒருவர் சங்கீதா. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள்  கடந்த நிலை யிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வேலை கேட்டு மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுப்பதை தொடர்கிறார். அக்டோபர் 17 திங்களன்று காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுப்பதற்காக வந்திருந்தார். அங்கிருந்த செய்தியாளர்கள் சிலரிடம், “இந்தச் செய்தியினை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலமாக தமிழக முதல் வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று எனக்கு அரசுப் பணி கிடைக்க ஆவண செய்யுங்கள்”  எனக்  கேட்டுக்கொண்டார்.