districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: குழித்துறையில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது

குழித்துறை, ஜுலை 13- குழித்துறை வாவுபலிபொருட்காட்சி திடல் அருகில் பழுதடைந்த, பயன் பாட்டில் இல்லாத ஆபத்தான கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி தீக்கதிரில் செய்தி வெளியானது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணை யாளர்/செயல் அலுவலர் ஞானசேகர் உத்தரவின் பேரில் அந்தக் கட்டிடம் இடித்து  தரைமாட்டமாக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம்  இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்த மான மிகப் புராதனமான மகாதேவன் சிவன் கோவில் குழித்துறையில் உள்ளது. இந்த கோவில் பின்பக்கம் உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. மக்கள் குளிப்பதற்கு செல்லும் பாதை யில் இந்த கட்டிடம் இருந்ததால் பொது மக்கள் அச்சமடைந்தனர். மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித் துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவு பலி பொருட்காட்சி 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களை வழிபடும் பலிதர்ப்ப ணம் செய்யம் நிகழ்ச்சி இந்த கோயில் வளாகத்தில் நடப்பது வழக்கம். ஆபத்தான இந்த கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்க ளுக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் மனுவாகவும் சமூக ஊடகம் வயிலாகவும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் இது சம்பந்த மான செய்தி தீக்கதிரில் ஜுலை 8 ஆம் தேதி வெளியானது. இதன் காரணமாக தற்போது இந்த கட்டிடம் அகற்றப்பட்டது பொதுமக்கள் இடையே நிம்மதியை ஏற் படுத்தியுள்ளது. தீக்கதிருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.