மதுரை, ஜூலை 25- மதுரை செல்லூர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் - சுவர்ணலட்சுமி தம்பதியினர். இவர் கர்களுக்கு ஒன்பது வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஞாயிறன்று வீட் டின் முன்பாக சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பெண் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண் சிறுமி யைக் கடத்த முயன்றதாகக் கூறி சிலர் அந்தப் பெண்ணை செல்லூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணை யில், குழந்தையை அழைத்துச் சென்ற பெண் செல்லூர் பகுதியில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். ஜெபக்கூடம் நடத்தும் பகுதியில் சிறுமியின் குடும் பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இதனால் இவர்களுக்குள் அறிமுகம் உள்ளது. சிறுமியின் பெற்றோர்
அனு மதியுடன் பல சமயங்களில் சிறுமி யை தனது பராமரிப்பில் வைத்துள்ளார். உண்மை நிலவரம் இப்படி யிருக்க பாஜக- இந்து அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டு, அந்தப் பெண், சிறுமியை கடத்த முயன்றார் என வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி னர். தகவலறிந்து காவல்நிலையம் வந்த திமுகவினர் அந்தப் பெண் சிறு மிக்கு அறிமுகமானவர், அவர் குழந் தையைக் கடத்த வில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரு கட்சியினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்ட தால் காவல்துறையினரை வர வழைக்கப்பட்டனர். இதற்கிடையில் காவல்துறையினர் சிறுமியின் பெற் றோரிடம் விசாரித்தனர். அப்போது, அந்தப் பெண் தங்களுக்கு மிகவும் அறிமுகமானவர். அவர் குழந்தை யைக் கடத்திச்செல்லவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து அந்தப் பெண்ணை காவல்துறையினர் விடு வித்தனர். ஜெபக்கூடத்தை காலி செய்ய பாஜக மேற்கொண்ட சதியே இது என்பது அம்பலமானது. இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறும்போது, சிறுமியை அந்தப் பெண் கடத்திச் செல்ல வில்லை. அறிமுகமான சிறுமி என்ப தால் அழைத்துச் சென்றுள்ளார். இதை அங்குள்ள சில இந்து மத அமைப்பினர் தலையிட்டு பிரச்சனை யாக்கியுள்ளனர். சிறுமியின் பெற் றோர் தங்களது குழந்தையை அந்தப் பெண் கடத்தவில்லை என்று கூறிய தால் பெண் விடுவிக்கப்பட்டு விட்டார் என்றனர்.