விருதுநகர், ஆக.13- விருதுநகர் - சாத்தூர் நான்கு வழிச் சாலையில் வேன் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பட்டாசு தொழிலாளர்கள் 10 பேர் காயமடைந்தனர். மதுரை மாவட்டம் வில்லூரிலிருந்து தாயில்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலைக்கு 17 தொழிலாளர்கள் தனி வாகனத்தில் சென்று வருவது வழக்கம். செவ்வா யன்று வேனில் தொழிலாளர்கள் வேலைக்கு புறப்பட்ட னர். வேனை ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் ஓட்டி வந்தார். விருதுநகர் அருகே நான்கு வழிச் சாலையில் தனி யார் ஆலை அருகே வந்த போது, எம்ஜிஆர் சாலையிலி ருந்து வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் ரஞ்சித் உட்பட வேனில் பயணம் செய்த பட்டாசு தொழிலாளர்கள் 10 பேர் காய மடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.