கொடைக்கானலில் 15 மி.மீ மழை
திண்டுக்கல், டிச.9- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வியாழ னன்று 15.4 மி.மீ மழை பெய்துள்ளது. இதே போல் திண்டுக்கல்லில் 4.6 மி.மீ மழையும், பழனியில் 2 மி.மீ மழையும், நத்தம், நிலக்கோட்டை, பகுதிகளில் 2 மி.மீ மழை யும், வேடசந்தூரில் 3.3 மி.மீ மழையும், காமாட்சிபுரத்தில் 1 மி.மீ மழையும் பெய்துள்ளது. சின்னாளபட்டியில் மழை இல்லை. மாவட்டத்தில் சராசரியாக 4.45 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் தேவை 602 மழை. இதுவரை 481.48 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. ஏரிச்சாலையில் மரம் விழுந்தது கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் விசாகன் விடுமுறை அறி வித்துள்ளார். அனைத்து நீர் வீழ்ச்சிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 50 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் ஏரிக்கரை சாலையில் உள்ள மரம் ஒன்று விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம்
திருவில்லிபுத்தூர்,டிச.9- டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 66 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் சீனியாபுரம் தெருவில் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் கிளை சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட செயலாளர் மரிய டேவிட் தலைமை தாங்கி னார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ச.தமிழ்ச்செல் வன், மாநிலக்குழு உறுப்பினர் சசிரேகா. சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.மகாலட்சுமி ஆகியோர் கருத்துரையாற்றி னர். மம்சாபுரம் மதுரை பாண்டியன் பாடல்கள் பாடினார். கருத்தரங்கில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உணவுப்பொருள் உற்பத்தி தொழிலுக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு
இராமநாதபுரம்.டிச.9- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு- சிறு நிறு வனங்களுக்கான திட்டம் 2020 - 2021 ஆ ம் ஆண்டு முதல் 2024 - 2025 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் இராமநாத புரம் மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்க ளை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும் தனி நபர், உணவு பதப்படுத்தும் தொழிலில் புதிதாக ஈடுபடும் குறு -சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப்பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள நபர்கள் குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் பெற்று பயனடைய வழிவகை உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், https://pmfme.mofpi.gov.in/ என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விபரங்கள் அறிய பொது மேலா ளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகம், இராமநாதபுரம். ( தொலைபேசி எண். 04567 – 230591இ 230497 ) என்ற முகவரியை அணுகவும். தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடைய லாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அணைகள் நிரம்பின
திண்டுக்கல், டிச.9- திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. மலை அடிவாரங்களில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. பழனி அருகேயுள்ள வரதமாநதி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதே போல இடைய கோட்டை பகுதியில் உள்ள நங்காஞ்சியார் அணையும் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. அதே போல குதிரையாறு அணை, பாலாறு பொருந்தலாறு அணை ஆகிய அணைகள் 95 விழுக்காடு நிறைந்துள்ளன. பரப்ப லாறு அணை 84 விழுக்காடும், குடகனாறு அணை 60 விழுக்காடும் நிறைந்துள்ளன. ஆத்தூர் காமராஜர் அணை ஏற்கனவே நிரம்பியது.
அருப்புக்கோட்டையில் பைக் மீது கார் மோதி விபத்து
அருப்புக்கோட்டை, டிச.9- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தைச் சேர்ந்த வர் நாகஜோதி(30).இவரு டைய உறவினரான புலியூ ரான் கிராமத்தைச் சேர்ந்த வர் முத்து(45).இவர்கள் இருவரும் அருப்புக் கோட்டை ஜோதிபுரத்தி லிருந்து சொந்த வேலை விஷயமாக புலியூரான் செல்வதற்காக ஒரே இரு சக்கர வாகனத்தில் வெள் ளிக்கிழமை கிளம்பிச் சென்றனராம். அப்போது அவர்கள் அருப்புக்கோட் டை புறவழிச்சாலைக்குச் சென்று அங்கிருந்து சாலை யைக் குறுக்காகக் கடக்க முயன்றனராம்.ஆனால் அதேவேளையில் தூத்துக் குடியிலிருந்து மதுரையை நோக்கி அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று அவர்க ளின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்ட தாம்.இதில் அவர்கள் இரு வரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர்,108 அவசர மீட்பு வாகனம் மூலம் படு காயமடைந்த இரு பெண்க ளையும் மீட்டு அருப்புக் கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விபத்துக் கான காரணம் குறித்து காய மடைந்த இரு பெண்களிட மும்,கார் ஓட்டுநரிடமும் விசாரணை மேற்கொண்ட னர்.
விருதுநகர் பாத்திமாநகரில் குடிநீருடன் கலந்து வரும் கழிவு நீர் : பொது மக்கள் அவதி
விருதுநகர், டிச.9- விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமாநகரில் குடிநீர் விநியோகத்தின் போது கழிவு நீரும் கலந்து வந்ததால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளா கினர். விருதுநகரில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 1 லட்சம் பொது மக்கள் வசித்து வரு கின்றனர். இங்குள்ள சுமார் 25 ஆயிரம் குடியிருப்புகளில் பாதிக்கும் மேல் பாதாளச் சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குடி யிருப்புகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரானது, முக்கியச் சாலையில் உள்ள மேன்வெல்கள் வழியாகச் சென்று கழிவு நீரேற்று நிலையத்தை அடைகின்றன. பின்பு, அங்கிருந்து கழிவு நீர் இராட்சத மோட்டர் மூலம் பம்ப் செய்யப்பட்டு, மாத்த நாயக்கன்பட்டி சாலையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விழுகிறது. பின்னர், அந்த கழிவு நீர் பல தொட்டிகளில் விழுந்து, இறுதியாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நல்ல நீரானது, கௌசிகா ஆற்றில் விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பாத்திமாநகர் ஆற்றுப்பாலம் அருகே உள்ள கழிவு நீரேற்று நிலை யத்தில் கழிவு நீரை முறை யாக பம்ப் செய்யப்படுவ தில்லை. இதன் காரணமாக, மேன்வெல்களில் கழிவு நீர் தேங்கி, அருகில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து விடுகிறது. பின்பு, பெரிய நீர்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் போது, வீடுகளுக்கு கழிவு நீருடன் கலந்து குடிநீர் வரு கிறது. இதனால், பெரும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதற்கு முக்கிய கார ணமாக இருந்து வருவது யாதெனில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொட்டிகளில் ஏராள மாய் மண் தேங்கியுள்ளது. அதை நகராட்சி ஊழியர்கள் அகற்றுவதில்லை. இதன் காரணமாக, இரு இடங்க ளில் உள்ள நீரேற்று நிலை யங்களில் இருந்து கழிவு நீர் பம்ப் செய்யும் போது, கழிவு நீர், சுத்திகரிப்பு நிலை யம் நிரம்பி, கழிவு நீரானது, கட்டிடச் சுவற்றின் வழியாக வழிந்தோடுகிறது. இதனால், பலமணி நேரம் இடைவெளிக்குப் பின் ஒவ்வொரு கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து கழிவு நீரை பம்ப் செய்ய வேண்டு மென உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படு கிறது. எனவே, நகராட்சி நிர்வா கமானது, சுத்தகிரிப்பு நிலை யத்தில் தேங்கியுள்ள மணலை உடனடியாக அகற்றுவதோடு, குடிநீரு டன் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலைப்பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மதுரை ஆட்சியர் அறிவிப்பு
மதுரை,டிச.9- மதுரை மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை எண். 7-இல் பெங்களூர்-சேலம்-மதுரை நான்கு வழிச்சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல்பணிகளுக்காக வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள கிராமங்களில் நிலங்கள் 2006 அம் ஆண்டு கையகம் செய்யப்பட்டுள்ளது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத்தொகை அதிகா ரம் பெற்றஅலுவலர் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலு வலரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நேர்வில் நில உரிமையாளர்களில் ஒரு சிலர் இழப்பீட்டுத் தொகையை நாளது தேதி வரை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளாதவர்கள் அலு வலக வேலை நாட்களில் நிலஉரிமை தொடர்பான சான்றாவ ணங்களுடன் மதுரை மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பித்து, அவர்களுக்கு பாத்தியப்பட்ட இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொள்ளுமாறு மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தகவல் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தாத இளையான்குடி வருவாய்த்துறை
சிவகங்கை,டிச.9- பட்டா மாற்றம் செய்தது தொடர்பான விவரங்களை மனுதாரருக்கு வழங்கக் கோரிய தகவல் ஆணைய உத்தரவை செயல்படுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் விஜயன்குடி குரூப் பட்டா எண் 920 சர்வே எண் 95 /4 .5 ஏக்கர் சென்ட் 33 இடமானது பட்டா மாற்றம் செய்தது தொடர்பான விவரங்கள் வேண்டும் என்று சந்திரன் என்பவர் இளையான்குடி பொது தகவல் அலுவலரும் துணை வட்டாட்சியரிடம் தகவல் பெறும் உரிமை சட்டப்படி கேட்டிருந்தார். இதுகுறித்து இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து எந்த தகவலும் சந்திரனுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் சந்திரன் 24 .9.2021 ஆம் தேதி சட்டப்பிரிவு 19(1) கீழான முதல் மேல் முறையீட்டு மனுவை அனுப்பியிருந்தார். 13. 12. 2021 ஆம் தேதி சட்டப்பிரிவு 19 /3 இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு தாக்கல் செய்துள்ளார். இரண்டு தேதியிட்ட ஆணை வாயிலாக மேல்முறையீட்டாளர் கோரியுள்ள தகவல்களை 15 தினங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தர விட்டது. ஆணையத்தின் உத்தரவின்படி இளையான்குடி பொது தகவல் அலுவலர், சந்திரனுக்கு தகவல் வழங்கவில்லை . மேல் முறையீட்டாளர் 29.4. 2022 ஆம் தேதி ஆணை நிறைவேற்றப்படாதது குறித்து மனுவை ஆணையத்திற்கு தாக்கல் செய்துள்ளார். மனு விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இது குறித்த விசாரணையில் மேல்முறை யீட்டாளர் ஆஜராகி தகவல் வழங்கப்பட வில்லை என்றும் முழுமையாக தக வலை வழங்க பொது தகவல் அலுவல ருக்கு உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். ஆணையத்தில் இது குறித்து நடந்த விசா ரணையில் ஆஜரான பொது தகவல் அலுவலர் 5 .8. 2021 மற்றும் 8.4.2022 ஆகிய தேதிகளில் விரைவில் அனைத்துத் தகவல்க ளையும் வழங்குவதாக ஏற்பளிப்பு செய்தார் .மீண்டும் இதுகுறித்த விசாரணையின் முடிவில் மேல்முறையீட்டாளர் கேட்கும் தகவல்கள் வழங்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆகவே விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேல்முறையீடாளர் 22-7-2021 தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1) இன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, குரூப் பட்டா எண் 920 சர்வே எண் 95/ 4 ல் 5 ஏக்கர் ஒரு சென்ட் 33 இடம் தொடர்பான அனைத்து பதிவேடுகள்,பதிவுகள், கோப்புகள் மற்றும் ஆவணங்களை உத்தரவு கிடைக்கப்பெற்ற பதினைந்து தினங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின்படி தகவல் வழங்கா ததால் மேல்முறையீட்டாளருக்கு ஏற் பட்டுள்ள மன உளைச்சல் காரணமாக சட்டப்பிரிவு 19(8)(b) இன் கீழ் பொது அமைப்பானது மேல்முறையீட்டாளருக்கு இழப்பீடு ஏன் வழங்க கூடாது என்ப தற்கான எழுத்துபூர்வமான விளக்கத்தி னை பொது அதிகார அமைப்பிடமிருந்து பெற்று இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30நாட்களுக்குள் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு கிடைக்கப்பெற வில்லையெனில் விளக்கம் அளிப்ப தற்க்கு எதுவுமில்லை என்று கருதப்பட்டு ஆவணங்களில் உள்ள விவரங்களின் அடிப்படையில் தகுந்த உத்தரவு பிறப்பிக் கப்படும் என தகவல் ஆணையர் உத்தரவிட்டு 12 மாதங்கள் முடிந்து விட்டது. இது தொடர்பாக பொதுதகவல் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது,தகவல் பெறும் ஆணையத்திற்கு தபாலில் பதில் அனுப்பி விட்டேன் என்று பதிலளித்தார்.
சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்வைப்பு
விருதுநகர், டிச.9- விருதுநகரில் சொத்து வரி செலுத்தாத இரு தனியார் கடைகளை நகராட்சி அலு வலர்கள் பூட்டி சீல் வைத்தனர். விருதுநகர் பழைய பேருந்து நிலை யம் எதிரே உள்ளது தர்காஸ் தெரு. இங்குள்ள இரு கடைகளும், புல்லலக் கோட்டை சாலையில் உள்ள ஒரு கடை யும் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தப் படவில்லை. 3 கடைகளுக்கும் சேர்த்து சுமார் ரூ.1 லட்சம் வரை பாக்கி நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து கடையின் உரி மையாளருக்கு பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்த வில்லையாம். இந்தநிலையில், நகராட்சி வருவாய் அலுவலர், வருவாய் ஆய்வா ளர், வரித்தண்டலர்கள் ஆகியோர் தர்காஸ் தெருவில் உள்ள இரு கடைகளுக்கும் சீல் வைத்தனர். பின்பு, ஒரு கடைக்கு வரி செலுத்தியதால் அக்கடைக்கு சீல் வைக்க வில்லை.