districts

img

ஆத்தூரில் வீடு இடிந்து சிறுவன் காயம்

சின்னாளபட்டி, ஜன.24- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட 10-ஆவது வார்டில் சத்யா நகரில் 100-க்கும் மேற்பட்ட தலித் குடும் பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள். இவர் களுக்கு 1987-ஆம் ஆண்டு இந் திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அந்த வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. வீடுகள் அனைத்தும் இடியும் தறுவாயில் உள்ளது இது சம்பந்தமாக பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் செல்வக்குமார் என்பவர் மகன் நாகக்குமார் இரவில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவர் மேல் சுவர் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்து திண்டுக் கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இது குறித்து ஆத்தூர் யூனி யன் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியத்திடம் கேட்டதற்கு, ‘‘வீடுகள், நிலங்கள் சேதமடைந் தால் வருவாய்த்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டு பேரிடர் மேலாண்மை மூலம் ஊராட்சித் தலைவர் வாயிலாக நிவாரண உதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில், ‘‘அரசு சேதமடைந்த பள்ளிகளை மரா மத்து செய்து கட்டிக் கொடுக்க உத்தரவிட்டது போல் சேதம டைந்த வீடுகளையும் மராமத்து செய்து கட்டிக் கொடுக்க வேண்டும். வீடு இடிந்து காயம டைந்த மாணவருக்கு நிதி உதவி வழங்க வேண்டும்’’ என்றனர்.