மதுரை, ஜூலை 24- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி-4-க்கான தேர்வானது ஜூலை 24 அன்று நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் 98 ஆயி ரத்து 762 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். முன்னதாக தேர்வர்களுக்காக சிறப்பு பேருந்துகள் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப் பாளையம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப் பட்டன. மதுரை மாவட்டத்தில் மதுரை, கள்ளிக்குடி, மதுரை - கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு, மேலூர், பேரை யூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 419 மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 569 பேர் விண்ணப்பித்தனர். கால தாமதம் மற்றும் சரி யான ஆவணம் இல்லாமல், எழுத விருப்பமில்லமால் என 18 ஆயிரத்து 807 பேர் பங்கேற்கவில்லை.