மதுரை, ஜூன் 8- மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த மே 14 ஆம் தேதி தொடங்கி ஜூன் 27ம் தேதி வரை அரசு சித்திரைப் பொருட்காட்சி நடைபெறுகிறது. அரசு பொருட்காட்சியில் அரசின் துறை சார்ந்த சாதனை அரங்குகள், பொழுதுபோக்கு, விளை யாட்டு அரங்குகள் 27 அரசுத்துறை அரங்குகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைக் கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதா னத்தில் நடைபெற்று வரும்அரசுப் பொருட்காட்சி யை இதுவரை 90,361 நபர்கள் பார்வையிட்டு உள்ள னர். இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 12,55,495 வரு வாய் ஈட்டப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 212-வது அரசுப் பொருட்காட்சியில் நுழைவுக் கட்ட ணமாக பெரியவரிக்கு 15 ரூபாயும், சிறியவர்க்கு 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மே 14 ஆம் தேதியன்று தொடங்கி ஜூன் 7 ஆம் தேதி வரையில் இதுவரை 70,377 பெரியவர்கள் மற்றும் 19,984 சிறியவர்கள் என மொத்தம் 90,361 நபர்கள் அரசுப் பொருட்காட்சியை பார்வையிட்டுள்ள தாக மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.