தேனி, செப்.11- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வீரபாண்டி யில் திங்களன்று 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்திற்கு தேவையான 4 கிராம் திருமாங்கல்யம் ரூ.30,000, மணமகன் ஆடை ரூ.1,000, மணமகள் ஆடை ரூ.2,000, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரு.2,000, மாலை, புஷ்பம் ரூ.1,000, பீரோ ரூ.7,800, கட்டில் ரூ.7,500, மெத்தை ரூ.2,200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1,000, ஒரு மிக்சி ரூ.1,490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3,640 என மொத்தம் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார். நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, துணை தலைவர் சாந்தகுமார், இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் கலைவாணன், கௌமாரி யம்மன் கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, குச்சனூர் கோயில் செயல் அலுவலர் மு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.