மதுரை, ஜன.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு - 2 ஆம் பகுதிகுழு சோலை அழகுபுரம் வட்டத்தின் மாமன்ற உறுப்பினராக நேர்மையாக மக்களுக்கு தொண்டு செய்த தோழர் முருகன் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று அனுஷ்டிக்கப்பட்டது. 90 வது வட்டம் சோலை அழ குபுரம் மெயின் ரோடு முதல்தெரு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், பகுதிகுழு செயலாளர் ஏ.எஸ்.செந்தில் குமார், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.பாலசுப்பிரமணியம், மாவட்டக் குழு உறுப்பினர் டி.நாக ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பகுதிக் குழு சார்பில் மூன்று இடங்களில் மரியாதை செலுத்தப்பட்டது.