districts

img

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு ,650 காளைகள் பங்கேற்பு; 54 பேர் காயம்

புதுக்கோட்டை, ஜன.13-  புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்வாக கந்தர்வ கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை. முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோர் முன் னிலை வகித்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகு திகளில் இருந்து சுமார் 650க்கும் மேற் பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகள் மருத்துவ குழுவினர் பரி சோதனைக்குப் பிறகு வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 300 மாடு பிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட 54 பேர் காயம டைந்தனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சையளித்த னர்.  நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட் டாட்சியர் அபிநயா, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், வட்டாட்சியர் சி.புவியரசன், காவல் ஆய்வாளர் அ.ம.செந்தில் மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.