districts

img

58 கிராம கால்வாயை பாதுகாக்கக் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக்.9- மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும், 58 கால்வாய்  தொட்டிப்பாலம் அருகே அமைக்கப் பட்டுள்ள கல்குவாரியை அகற்றிட வேண்  டும், மதுரை மாவட்டத்தில் பெரியார்,  வைகை பாசன பகுதியை (நிலங்களை) புதிய சர்வே செய்து அறிவிக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட் டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் பி.எஸ்.முத்துப்பாண்டி, ஒன்றியச் செயலாளர் வி.குமாரசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செய லாளர் ஏ.விஜயமுருகன், மாவட்டத் தலை வர் ஏ.வேல்பாண்டி, தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்  கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.பி. முருகன், உசிலம்பட்டி ஒன்றியச் செயலா ளர் பெ.ராமர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுத்தி பேசினர். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.