districts

img

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 5000 பேர் பங்கேற்பு

திருநெல்வேலி, அக். 11- பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி  செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது, இந்த மனித  சங்கிலி போராட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் துவக்கி வைத்தார், மனித சங்கிலியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமணன், மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம், மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்தி ரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.சங்கரபாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட்  கட்சி நிர்வாகி சங்கரபாண்டி யன், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் சாகுல் அமீது, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன்  மற்றும் திராவிட தமிழர் கட்சி நிர்வாகிகள், தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள், தமிழர் கூட்டமைப்பு பீட்டர்,சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடலைராஜ் உட்பட 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,  போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் ஆர்.கருமலையான் முடித்து வைத்தார், மனித சங்கிலி யில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன்,  சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள்,55 வது மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கு.பழனி, ஜோதி, சிஐடியு  மாவட்ட தலைவர் பீர் முஹம்மது ஷா, மாவட்ட செயலாளர் ஆர்.முருகன், மாவட்ட பொருளாளர் ராஜன்,சிஐடியு நிர்வாகி காமராஜ், மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் முத்துமாரி ,பொன் எழில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அருள், இந்திய மாணவர் சங்க சத்யா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்லத்துரை , சிபிஎம் நெல்லை தாலுகா செயலாளர் நாராயணன்  உட்பட ஆயிரக்கணக்கானோர்  கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி நெல்லை மாநகரம் ,சேரன்மகாதேவி, பாப்பாக் குடி, அம்பாசமுத்திரம், களக்காடு ,ஏர்வாடி, திசையன்விளை, வள்ளியூர் வி.கே.புரம், நாங்குநேரி ஆக 10 இடங்களில் நடைபெற்றது, மாவட்டம் முழுவதும் சுமார் 5,000க்கும்  அதிகமானோர் பங்கேற்றனர்.