மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 35 ஆவது வார்டு நியூ எல்.ஐ.சி காலனி சிறுவர் பூங்கா சுற்றுச்சுவர் அமைக்க 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ,பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி, மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல், வடக்கு மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி துணை ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.