மதுரை, அக் 7- மதுரை அரசரடி ரயில்வே மைதானம் எதிரில் உள்ள தனி யார் உணவு விடுதி அருகில் தேனி ஸ்ரீநவமணி ஜூவல்லர்ஸ் க்கு சொந்தமான காரில் இருந்து ரூ .31 லட்சத்து 39 ஆயி ரத்து 245 மதிப்புள்ள தங்க நகை கள் மற்றும் பணம் ரூ .10 லட்சதது 25 ஆயிரம் ஆகியவை இரண்டு தினங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிப்பதற்கு மதுரை மாநகர் காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தர வின்படி, காவல் துணை ஆணையர் சீனிவாசப்பெருமாள் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் ரவீந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மேற்படி நகைக்கடையில் மேலாளராக பணிபுரியும் சாயுபு சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் இவ்வழக்கில் நகைகடையில் விற்பனையாளராக பணிபுரியும் வினோத்குமார் , கடையின் முன்னாள் ஓட்டுநர் சுப்புராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் இளைய ராஜா , மருதுபாண்டி ஆகியோர்கள் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தனர். விருதுநகரில் பதுங்கியிருந்த நகைக்கடை முன்னாள் ஓட்டுநர் சுப்புராஜ் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது . பின்னர் தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பதுங்கியிருந்த இளைய ராஜா மற்றும் மருதுபாண்டி ஆகியோரை கைது செய்து, சம்பவத்திற்கு பயன்படுத்திய வாகனம் பைக்கும் காரில் கொள்ளையடிக்க பயன்படுத்திய சாவி கைப் பற்றப்பட்டது தொடர்ந்து தேனி மாவட்டம் போடியில் இருந்த வினோத்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.