districts

மதுரையில் இடியுடன் கனமழை: மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

மதுரை, ஜூலை 31- மதுரை மாவட்டம் முழுவதிலும்  ஜூலை 30 சனிக்கிழமையன்று மாலை தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கன  மழை பெய்தது. இதனால் ஆங்  காங்கே சாலைகள், தெருப்பகுதி களில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி யது. இதில் ஆண்டாள்புரம் மேற்கு தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தச்சுவேலையில் ஈடுபட்டுக் கொண்  டிருந்ந ஆண்டாள்புரம் எச்எம்எஸ்  காலனி பகுதியை சேர்ந்த முரு கேசன் (52) மற்றும், ஜெய்ஹிந்த் புரம் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (38) ஆகிய இருவர் மீதும் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுப்ரமணியபுரம் காவல்துறையினர் உடல்களை  மீட்டு அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாநகர் மேல பெரு மாள் மேஸ்திரி வீதி பகுதியில் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி யிருந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்த நிலை யில் மழைநீரில் சடலமாக கிடந்  துள்ளனர். இதில் ஒருவர் தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த குமார்  மற்றும் அடையாளம் தெரியாத  பெண் ஆவர். திடீர்நகர் காவல துறையினர் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இடியுடன் பெய்த கனமழை யால் 4 பேர் உயிரிழந்த சம்பவம்  பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி  மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும் ஒர்க்சாப் ரோடு பாலம், செல்லூர், எல்லீஸ் நகர்,  பெரியார் பேருந்து நிலையம், ஆரப்  பாளையம், டிவிஎஸ் நகர் பாலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்திருந்தன. இத னால் போக்குவரத்து பாதிக்கப் பட்டு, பொதுமக்கள் கடும் அவ திப்பட்டனர். 

சிதிலமடைந்த சாலைகளால் நிகழும் விபத்துக்கள்

மதுரை நகர் பகுதியில் சாலை கள் முழுவதும் மிக மோசமாக வும் சிதிலமடைந்தும் கிடக்கின்றது.  இதனால் மழை நேரங்களில் வாக னத்தில் வருபவர்கள் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடையக்கூடிய நிலை உள் ளது. மழைநீர் வடிகாலுக்கு செல்வ தற்கு நீண்ட நேரம் ஆவதால் தெரு  பகுதிகளில் தண்ணீர் பல மணி நேரம் தேங்கிக்கிடக்கின்றது.  எனவே மழை நீர் வடிகால் வாய்க்காலை உடனடியாக சீர மைக்க வேண்டும், சாலைகளை நெடுஞ்சாலைத்துறை நிர்வாக மும் மாநகராட்சி நிர்வாகமும் சீர மைக்கும்போது பழைய சாலை களை பெயர்த்து எடுத்துவிட்டு புதிய  சாலைகள் அமைக்க வேண்டும். இந்த முறையில் பணி செய்யாத தால் பல பகுதிகளில் பள்ளத்தில்  வீடுகளும் சாலைகள் மேடாகவும்  உள்ளது. இது வரும் காலங்களில்  மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத் தும். மழைநீர் வடிகால்களை சரி யான முறையில் பராமரிக்க வேண்  டும் என்று மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.