பெரியகுளம் கொலையில் 4 பேர் கைது
தேனி, ஏப்.13- பெரியகுளம் அருகே முன்விரோதம் காரணமாக வாலி பர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை கைது செய்தனர். பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தை சேர்ந்த பாண்டி மகன் விஜயராஜன் (24). இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைத்தியநாதபுரம் வெற்றிலை மடம் தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ் (23) என்பவர் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் சூர்யபிரகாசின் மோட்டார் சைக் கிளை விஜயராஜன் பறித்துக் கொண்டார். தான் கொடுத்த பணத்தை கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளை வாங்கிச் செல்லுமாறு கூறிவிட்டு சென்றார். இதனால் ஆத்திரம டைந்த சூர்யபிரகாஷ், அவரது தம்பி அருண்குமார் (21) ஆகியோர் விஜயராஜனை கொலைசெய்ய திட்ட மிட்டனர். அதன்படி சூர்யபிரகாஷ் தனது நண்பர்களான ரஞ்சித் (25), சசிபிரபு (23), பிரதீப் (24), முத்துராஜ் (28) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ய முடிவுசெய்தார். புதனன்று வைத்தியநாதபுரத்தில் உள்ள தென்னந்தோப் பில் இவர்கள் அனைவரும் மது குடித்தனர். பின்னர் அருண்குமார் தனது செல்போன் மூலம் விஜயராஜனை சம்பவ இடத்திற்கு அழைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயராஜனை வெட்டியுள்ளார் . இதனால் அதிர்ச்சியடைந்த விஜயராஜன் தப்பித்து ஓட முயன்றார். இருந்தபோதும் சூர்யபிரகாஷ் மற்றும் அவரது நண் பர்கள் சுற்றி வளைத்து அவரை பிடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். காவல்துறையினர் விஜயராஜன் உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சூர்யபிரகாஷ், அருண்குமார், ரஞ்சித், சசி பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
வழிப்பறி வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளர் பணிநீக்கம்
மதுரை, ஏப்.13- சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த வர் அர்ஷத். பேக் விற்பனை தொழில் செய்து வருகிறார். கடந்த 2021 இல் மதுரை அருகே நாகமலை புதுக்கோட் டைக்கு வந்த இவரிடம் காவல் ஆய்வாளர் வசந்தி உள்ளிட்ட 5 பேர், ரூ.10 லட்சத்தை பறித்துச்சென்றனர். இந்த வழக்கில் வசந்தி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து வசந்தி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த வசந்தி, வழக்கின் முக்கிய சாட்சியை அவர் மிரட்டி யதாக புகார் அளிக்கப்பட்டது. அவரின் ஜாமீனை ரத்து செய்யும்படி காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதி மன்றம், புகாரின்மீது தென் மண்டல காவல்துறைத் தலை வர் விசாரணை நடத்தி முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வசந்தி மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க லாம் என்று உத்தரவிட்டது. இதையடுத்து காவல் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நடத்திய விசாரணை யில், ஆய்வாளர் வசந்தி சாட்சியை மிரட்டியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மார்ச் 31 ஆம் தேதி காவல் துறையினர் அவரை கைது செய்தனர். தொடர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை அடுத்து வசந்தி யை காவல் ஆய்வாளர் பணியிலிருந்து நீக்கி மதுரை சரக துணைத்தலைவர் பொன்னி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி சிறுமி தற்கொலை
தேனி, ஏப்.13- தேனி அருகே பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி விலக்கு பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா மகள் பிருந்தா ஸ்ரீ(13). இவர் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி விடுதி யில் தங்கி 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால் அவரை பெற்றோர் கண்டித்த னர். இதனால் மனமுடைந்த பிருந்தாஸ்ரீ வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்த னர். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர், ஆசிரியை மீது தாக்குதல் தலைமறைவான பள்ளி தாளாளருக்கு போலீசார் வலைவீச்சு
தேனி, ஏப்.13- தேனியில் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியை ஆகியோரை தாக்கிய பள்ளியின் தாளாளரும் முத்தையா பள்ளி தலைமை ஆசிரியருமான அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தேடி வருகிறார்கள். தேனி சுப்பன்தெரு திட்டச் சாலையில் மகாராஜா தொடக் கப்பள்ளி உள்ளது. இது அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சென்றாயப்பெருமாள் என்பவ ரும் சுமதி என்ற ஆசிரியையும் பணி யாற்றி வருகிறார். சுமார் 20 மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முகமை பொறுப்பாளராக இருப்ப வர் அன்பழகன். அவர் அல்லிநக ரத்தில் உள்ள முத்தையா உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரி யராகவும் இருக்கிறார். இந்நிலையில் இந்த பள்ளியில் இரண்டு தினங்களுக்கு முன் மாண வர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் சென்றாயப்பெருமாளை அன்பழகன் தாக்கினார். இதில் தலைமை ஆசிரியர் நிலை தடு மாறி கீழே விழுந்தார். இதில் சுமதி என்கிற ஆசிரியையும் தாக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தலைமை ஆசிரியர், ஆசிரியை மற்றும் மாணவ, மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டு விட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவின்பேரில், முதன்மை கல்வி அதிகாரி செந்தி வேல்முருகன் அந்த பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி னார். பள்ளிக்கு வெளியே காத்தி ருந்த மாணவ, மாணவிகள் அவர் களின் வீடுகளுக்கு அனுப்பி வைக் கப்பட்டனர். புகார் இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் தலைமை ஆசிரியர் சென் றாயப்பெருமாள் கொடுத்த புகா ரின் பேரில் தேனி காவல்துறையின ருக்கு, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்பேரில், பள்ளி நிர்வாகியான அன்பழகன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்தார். தலை மறைவாக உள்ள அன்பழகனை தேடி வருகின்றனர். மாணவர்கள் இடமாற்றம் இதற்கிடையே மகாராஜா பள்ளியில் படித்த மாணவ, மாணவி கள், பங்களாமேட்டில் உள்ள நக ராட்சி தொடக்கப்பள்ளிக்கு மாற் றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத் தப்படும். அங்கு இருந்தபடியே ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒன்றிய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தில் ஒப்புகைக் சீட்டு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
விருதுநகர், ஏப்.13- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்காமல் வேளாண்மைத் துறை மற்றும் வி.ஏ.ஓ அலுவலகங்க ளுக்கு அலைக்கழிக்கப்படுவதாக விவ சாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசானது, தமிழக அரசின் மூலம் விவசாயிகளுக்கான வேளாண் அடுக்கு திட்டத்தை அமல்படுத்தி வரு கிறது. இதன் மூலம், நில விபரங்களு டன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் விபரம், நில உடைமை வாரியாக புவி யியல் குறியீடு செய்தல், சாகுபடி பயிர் விபரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது நிலம் சம்பந்தமான விபரங்கள், ஆதார் அட்டை, கிணற்றுக்கான மின் இணைப்பு எண் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு செல் கின்றனர். அதைப் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கணினி யில் விவசாயிகள் கொடுத்த விபரங் களை பதிவேற்றம் செய்கின்றனர். ஆனால், வேளாண் அடுக்கு முறையில் பதிவு செய்ததற்கான ஒப்புகைச் சீட்டோ, செல்போனில் ஒருமுறை கடவுச் சொல் என எதுவும் வருவதில்லை. இத்திட்டத்தில் தாங்கள் பதிவு செய் ததற்கான எவ்வித ஆதாரமும் வழங் கப்படாத காரணத்தால், விவசாயிகள் குழப்பமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அலைக்கழிக்கப்படும் விவசாயிகள் இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில துணைச் செய லாளர் அ.விஜயமுருகன் கூறியதா வது: அரசின் பல்வேறு திட்டங்களை இணையதளம் மூலம் பொது மக்கள் பதிவு செய்யும் போது செல்போனுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச் சொல் வருகிறது. பதிவு செய்து முடித்தவுடன் ஒப்புகைச் சீட்டும் வழங்கப்படுகிறது.
இதை பதிவு செய்ததற்கான ஆதா ரமாக மக்கள் வைத்துக் கொள்கின்ற னர். மேலும், பதிவு செய்த திட்டத்தின் நிலை குறித்தும் ஒப்புகைச் சீட்டில் உள்ள எண் மூலம் இணைய தளத்தில் உரிய விபரங்ளை அறிய முடியும். ஆனால், ஒன்றிய அரசின் அடுக்குமுறை திட்டத்தில் தங்ளது நிலம் குறித்த தக வல்களை பதிவு செய்த விவசாயி களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்குவ தில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கேட் டால், வேளாண்மைத்துறை அலுவல கத்தில் கேட்டுக் கொள்ளுங்கள் என தெரிவிக்கின்றனர். அங்கு போய் கேட் டால், வருவாய்த்துறையின் செயலி மூலம் தான் பதிவேற்றம் செய்யப்படு கிறது. எனவே, அவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என பதில் கூறுகின்ற னர். இதனால், விவசாயிகள் இரு அலு வலகங்களுக்கும் அலைக்கழிக்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஒன்றிய அரசு, அவசர கதியில் பி.எம் கிசான் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளை இணைக்கும் வேலையை செய்தது. இதில் வருடம் ரூ.6ஆயிரம் விவசாயிகளுக்கு வழங் கப்பட்டது. தகுதியற்ற பலர் இத்திட் டத்தில் பணம் பெற்றனர். மாறாக பல்வேறு மாவட்டங்களில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற் றது. இதனால், தகுதியான விவசாயி கள் பலருக்கு உதவித் தொகை கிடைக்க வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். எனவே, ஒன்றிய அரசானது, மாநில அரசின் மூலம் செய்யப்பட்டு வரும் வேளாண் அடுக்கு திட்டத்தை முறை யாக விவசாயிகளை அலைக்கழிப்பு செய்யாமல் ஒப்புகைச் சீட்டு வழங்கி நடைமுறைப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
16 கிராமங்கள் பயன்பெறுகிற நாட்டார் கால்வாயை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு
தமிழரசி எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் அறிவிப்பு
சிவகங்கை, ஏப்.13- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற் றில் நாட்டார் கால்வாய் கடந்த ஆண்டுகளில் மேம் படுத்தப்படாமல் இருந்தது.இதனால் நாட்டார் கால் வாய் கண்மாய்கள் வறண்டு விவசாயம் கேள்விக்குறி யாக உள்ளது. இது தொடர்பாக மானா மதுரை சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசி ரவிக்குமார் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசினார். மானாமதுரை அருகே வைகை ஆற்றில் இருந்து பிரிந்து நாட்டார் கால்வாய் வழியாக ஆர். புதூர் ,அன்ன வாசல், கிழங்காட்டூர், கரிச குளம், அரிமண்டபம், உள் ளிட்ட 16 கிராமங்கள் பயன் பெறுகின்றன. இந்த கால் வாய் மேம்படுத்தப்படாத தால் வைகை ஆற்றில் வெள் ளமென தண்ணீர் வந்த போதும் கூட தண்ணீர் செல் லாத நிலை உள்ளது. இது குறித்து தொடர்ந்து விவ சாயிகள் வலியுறுத்தி வந்த னர். இப்பகுதி நாட்டார் கால்வாய் விவசாயிகள் சங் கத்தின் தலைவர் துபாய் காந்தி நாட்டார் கால்வாளை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வந்தார் .தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் நாட்டார் கால்வாயை மேம் படுத்த வேண்டும் என்று விவ சாயிகளுடைய கோரிக்கை யை வலியுறுத்தியது. கீழ மேல்குடி நீரினைப் பயன் படுத்துவோர் சங்கத்தின் தலைவர் வெள்ளமுத்துவும் வலியுறுத்தினார். இந்நிலையில் மானா மதுரை சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசி ரவிக்குமார் சட்டமன்றத்தில் பேசுகை யில், நாட்டார் கால்வாய் மூலமாக வைகை தண்ணீர் கொண்டு சென்றால் 16 பெரியகண்மாய்கள், 25 சிறிய கண்மாய்கள், 25 குளங்கள் பயன்பெறு கின்றன. 20ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என் றார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாட்டார் கால்வாயை மேம்படுத்த ரூ10 கோடி நிதி ஒதுக்கு வதாக அறிவித்தார். இதனை அறிந்து அனைத்து விவ சாயிகளும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமி ழரசி ரவிக்குமாருக்கு நன்றி தெரிவித்தனர்.
குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
கடமலைக்குண்டு, ஏப்.13- தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே புதுராமச்சந்திராபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கடந்த 3 வாரங்களாக புதுராமச்சந்திராபுரம் கிராமத்திற்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் இந்த கிராமத்தில் பல மாதங்களாக சாக்கடை வடிகால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கண்டமனூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து வியாழக்கிழமை காலை குடிநீர் வழங்கப்படா ததை கண்டித்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபடுவதற்காக ஒன்று திரண்டனர். தகவலறிந்த கண்டமனூர் போலீசார் புதுராமச்சந்திராபுரம் கிரா மத்திற்கு சென்றனர். அப்போது பொதுமக்கள் தேனி-வருசநாடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் மற்றும் சாக்கடை பிரச்சனை தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உரிய நட வடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை செயல்படுத்துக! மாவட்ட ஆட்சியரிடம் மாணவர் சங்கம் மனு
மதுரை, ஏப்.13- தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளத்தை உட னடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஒன்றிய அரசு 2009 ஆம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த மார்ச் 20 முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. தற் போது வரை விண்ணப்பிப்பதற்கான இணையதளம் உப யோகத்தில் இல்லாத நிலை உள்ளது. எனவே குறைபாடு களை சரி செய்து உடனடியாக இணையதளத்தை உபயோ கத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தினர். மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் க.பாலமுருகன், டேனியல் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.