தேனி, ஆக.6- தேனி மாவட்டம், உத்தமபாளை யத்தில் பை ஒன்றில் மாமிசங்களுடன் நின்ற கார் ஒன்றில் 3 பேர் இருந்தனர். அங்கு போலீஸ் ஏ.எஸ்.பி. மது குமாரி தலைமையில் நடந்த வாகன சோதனையில் மூன்று மாமிச உறுப்பு களுடன் சிக்கினர். இவர்களிடம் நடத்திய விசாரணையில். மதுரை அய்யனார் கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (39), கமுதியை சேர்ந்த டேவிட் பிரதாப் சிங் (40), மற்றும் பசும்பொன் கிராமத்தை சேர்த்த கமுதி முன்னாள் ஒன்றிய அதிமுக செயலாளர் முருகன் என தெரிந்தது. இதில் கொண்டுவரப்பட்ட பையில் இருந்த ஈரல், மூளை, நாக்கு போன்றவை போலீஸாரிடம் சந்தே கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீ ஸார் நடத்திய விசாரணையில், பையில் கொண்டுவரப்பட்டது மனித உறுப்புகளா அல்லது விலங்கினங்களின் உறுப்பு களா என ஆய்வு செய்யப்பட்டது. மூவரும் போலீஸாரிடம் கூறிய தகவல் அதிர்ச்சி யை உண்டாக்கியது. பணம் இரட்டிப்பு செய்யும் மோசடி கும்பலின் தலைவனாக செயல்பட்ட உத்தமபாளையத்தை சேர்ந்த ஜேம்ஸ் (55), மற்றும் வண்டிப்பெரியார் மூவாற்று புழாவை சேர்ந்த செல்லப்பா, மற்றும் உத்தமபாளையம் தென்னஞ்சாலை யை சேர்ந்த பாண்டி, மற்றும் உத்தம பாளையம் களிமேட்டுபட்டியை சேர்ந்த பாவா பக்ருதீன் (42), ஆகியோர் சேர்ந்து பணம் ஏமாற்றி பறிக்க முயன்றது தெரி யவந்தது. குறிப்பாக, உத்தமபாளையம் பாறைமேடு தெருவை சேர்ந்த மந்திர வாதி ஜேம்ஸ் (55), என்பவர் நள்ளிரவில் பூஜை செய்தால், பணம் இரட்டிப்பாக மாறும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி அலெக்ஸ்பாண்டி தான் கொண்டு வந்த ரூ.2.50 லட்சம் பணத்தை, செல்லப்பாவிடம் கொடுத்துள்ளார். அவர் தந்த பையை பிரிக்கக்கூடாது என்று கூறி அனுப்பி உள்ளார். இதனை மந்திரவாதி ஜேம்ஸிடம் தந்தால், பணம் 5 லட்சமாக மாறும் என கூறப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட பையை , கொண்டுவந்த போதுதான், ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அலெக்ஸ்பாண்டி, உத்தம பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து தனிப்படை கள் அமைக்கப்பட்டன. உத்தமபாளை யம் காவல் ஆய்வாளர் சிலைமணி தலை மையில், முக்கிய குற்றவாளிகள் குறித்த தகவலின் அடிப்படையில், தீவிரம் காட்டப்பட்டது. இந்த மோசடியில் மந்திரவாதி ஜேம்ஸ் மற்றும் இவரது கூட்டாளிகளாக செயல்பட்ட நிருபர் பாவா பக்ரூதீன், பாண்டி ஆகிய மூன்றுபேரும், மோசடி பணத்தில் உல்லாசமாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, இவர்களை பிடிக்க விரைந்தனர். இவர்கள் தப்பி சென்ற கார் சி.சி.டி.வி. கேமிரா மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தனிப்படை போலீ சார் மூவரையும் கைது செய்து, உத்தம பாளையம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதேபோல் கேரளா மாநிலம் மூவாற்று புழாவை சேர்ந்த செல்லப்பா பிடிபட்டார். இவர்களிடம் நடத்திய விசா ரணையில், கசாப்பு கடை ஒன்றில் வாங்கிய, ஆட்டின் நாக்கு, ஈரல், மூளை என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்ற னர்.