districts

img

3000 ஆண்டு அரிட்டாபட்டி - மலையின் மேன்மையை பாதுகாப்போம்!

மதுரை, டிச.2-  தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்  பாதுகாப்பு மண்டலமாக தமிழக  அரசால் அறிவிக்கப்பட்டுள்ள  மதுரை அரிட்டாபட்டி மலைப்  பகுதியை டிசம்பர் 1 வியாழனன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பார்வையிட்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்.பி., கூறிய தாவது: தமிழக அரசின் மிகச் சிறப்  பான அறிவிப்பாக அரிட்டாபட்டி  மலைப்பகுதியை பல்லுயிர் பாரம்  பரிய தலம் என்பது வெளியாகி யுள்ளது. இது பல்லுயிர்களை நேசிக்கிற சுற்றுச்சூழல் ஆர்வ லர்களுக்கும், வரலாற்று பாரம்  பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிற வரலாற்று ஆர்  வலர்களுக்கும், மதுரையினு டைய சிறப்பை விரும்புகிற நேசிக்  கிற எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மகிழ்வூட்டக்கூடிய அறிவிப்பு.  பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன். 2019 ஆம் ஆண்டு முடி வெடுக்கப்பட்ட அறிவிப்பு இது.  பல்வேறு காரணங்களால் கிடப் பில் போடப்பட்டது. இன்றைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பினை வெளி யிட்டுள்ளார். 

மிகப்பழமையான எழுத்துக்கள் உள்ள இடம்

அரிட்டாபட்டியின் சிறப்பை சொல்லி மாளாது. கி.மு. மூன்றா வது நூற்றாண்டை சார்ந்த தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கிற இடம். இந்தியாவிலேயே மிகப் பழமையான எழுத்துக்கள் இருக்  கிற இடம் இது .மலையினுடைய  இடப்பக்கம் உள்ள அரிட்டாபட்டி யிலும், வலப்பக்கம் இருக்கிற மீனாட்சிபுரத்திலும் இவை இருக்  கின்றன. 3 ஆயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழ் எழுத்து, அதற்குப் பிறகு சமண மதத்தினு டைய அறிவுரைகள், சிற்பங்கள், முக்கால பாண்டியர்களின் வருகை, சிவனுக்கான குடவரை கோவில் என்று தொடர்ச்சியான வரலாற்று அடையாளங்களை இந்த மலை தன்னுடைய நில மெங்கும் வைத்திருக்கிறது. அவ்  வளவு பெரும் பாரம்பரிய வர லாற்று தொடர்ச்சி இந்த இடத்தில் உள்ளது.  இந்த மலைப்பகுதியில் 7 குன்றுகள் உள்ளன. ஏழு குன்று களுக்கும் இடையில் எண்ணற்ற குளங்கள், ஊற்றுகள், நீரோட் டங்கள், ஓடைகள் என்று இயற் கையின் பல வண்ணங்கள் நிறைந்து  இருக்கக்கூடிய ஒரு நிலம். இந்த இடத்திலே பலவிதமான உயி ரினங்கள், பறவைகள் இருக்கின் றன. எத்தனையோ வகையான  கொன்றுண்ணிகள் (வேட்டை பற வைகள்) இருக்கின்றன. 

செழிப்பான வனம்

வேட்டை பறவைகள் இருந்  தால் செழிப்பான வனத்தினுடைய அறிகுறி. அதிலும் குறிப்பாக  மூன்று வகையான வேட்டை பற வைகள் இருப்பதாக பறவை ஆர்  வலர்கள் கூறுகிறார்கள். ‘லகுடு’  என்று சொல்லக்கூடிய வேட்டை  பறவை, ராஜாளி, புள்ளி கழுகு கள் மற்றும் பலவகையான ஆந்  தைகள் உள்ளன. பாம்பு தின்னி  பருந்து, பல வகையான பாம்பு கள், எண்ணற்ற வண்ணத்துப்  பூச்சிகள், எண்ணற்ற பறவை இனங்கள் என பறவை தங்குகிற ஒரு மையமாக இந்த இடம் இருக்  கிறது. அதேபோல இயற்கை யின் பல அழகுகள் நிரம்பிய நிலப்பகுதி.  வரலாற்று பாரம்பரியமும் இயற்கைச் சங்கிலியும் சிதையா மல் இணைந்த ஒரு புள்ளியின்  மீது நாம் நின்று கொண்டிருக்கி றோம்.  இயற்கையை நேசிக்கிற, வர லாற்றை நேசிக்கிற, நம்முடைய பல அடையாளங்களைக் கொண்ட இந்த நிலத்தை பாரம்பரிய பல்லு யிர் பாதுகாப்பு மண்டலமாக தமி ழக அரசு அறிவித்திருப்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயம். இந்த இடம் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும். பாது காக்கப்பட வேண்டும் என்பதற் காக பல அமைப்புகள், பல தனி நபர்கள், பல கலைஞர்கள் தொட ர்ந்து முயற்சி எடுத்து வந்திருக்கி றார்கள். பல கல்வி நிறுவனங்க ளும் முயற்சி எடுத்தன. அவர்கள்  அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன்.

விரிவான திட்ட அறிக்கை தேவை

 இந்த அறிவிப்பின் அடுத்த கட்டத்தை செயல் வடிவம் தருவ தற்கான ஏற்பாட்டை அனைவரும் இணைந்து செய்ய வேண்டியுள் ளது. முதலில் இதற்கு விரிவான  திட்ட அறிக்கை தயார் செய்ய  வேண்டியுள்ளது. இந்த பகுதி யின் கிராம மக்கள் அனைவருக் கும் இது குறித்து விழிப்புணர்வை  உருவாக்க வேண்டும். இது ஒரு  வெறும் பொழுதுபோக்கு சுற்று லாத்தலமாக மாறிவிடக்கூடாது; அதே நேரத்தில் இங்கு எல்லோ ரும் வந்து போகிற ஒரு இடமாக  இருக்க வேண்டும். இந்த இடத்தி னுடைய அமைதி குலையாமல், பாதுகாக்கப்பட வேண்டும். முத லில் ஒரு காட்சிக்கூடம் உருவாக்  கப்பட வேண்டும். ஏன் பல்லுயிர்  பாரம்பரிய இடமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது; இதில் இருக்கிற வரலாற்று சிறப்பு என்ன; பற வைகள், உயிரினங்கள், இயற்கை சார்ந்த சிறப்பு என்ன; ஒவ்வொரு குன்றும் ஒவ்வொரு மலையினுடைய பாறைகளின் சிறப்பு என்ன; என்பதைப் பற்றி  வரலாற்று கூடம் ஒன்று இதற்கு  வெளிப்பகுதியிலே அமைக்கப் பட வேண்டும். அது நம்முடைய  மாணவர்களுக்கும், இளைஞர் களுக்கும், சமூகத்திற்கும் மிகவும் பயன்படும். அதைத்தொடர்ந்து அரிட்டாபட்டியின் திட்ட வரைவு என்பது இந்தியாவிலேயே முன்  மாதிரியாக இருக்க வேண்டும்.  ஏனென்றால் இது இந்தியாவி லேயே முன்மாதிரியான நிலம். இதனுடைய மேன்மையைப் பாது காக்க வேண்டும்.அதற்கு மக்கள்  அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் தார். மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் எஸ்.சரவணன், வனத் துறை அதிகாரி குரு மற்றும் அர சுத்துறை அதிகாரிகள், மேலூர்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ராமமூர்த்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலா,  மேலூர் தாலுகாச் செயலாளர் எம். கண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.