districts

img

15 ஆண்டுகளாக பணியாற்றிய 300 ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரே நாளில் பணி நீக்கம்

மதுரை, டிச.29- மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை, குடிநீர் பொறி யியல் பிரிவில் பிட்டர், தொழில் நுட்ப உதவியாளர், வால்வு ஆப்ரேட்டர், பிட்டர் கூலி என பணியாற்றிய 300 ஒப்பந்தத் தொழிலாளர்களை மாநகராட்சி நிர்வாகம் திடீரென்று பணி நீக் கம் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு 200 க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். 15 ஆண்டு களுக்கும் மேலாக ஒப்பந்த முறை யில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் கார்த்தி கேயன் அறையின் முன் உள்ளி ருப்பு  போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்டு வரும் ஒப்பந்த தொழிலா ளர்களுடன் மதுரை மாநகராட்சி துணை ஆணையர் சங்கீதா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து  தொழிலா ளர்கள் போராட்டத்தை தற்காலிக மாக விலக்கிக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு மதுரை  மாநக ராட்சி தொழிலாளர்  சங்க  பொதுச் செயலாளர்  ம. பாலசுப்பிரமணி யன் கூறுகையில் “நிதி பற்றாக் குறையை காரணம் காட்டி தொழி லாளர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர், கடந்த இரு மாதங்க ளில் 156 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் செவ்வாயன்று  ஒரே நாளில் 300 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ் வொரு வார்டிலும் தேவைக்கு அதிகப்படியாக தொழிலாளர் கள் பணியில் உள்ளதாக மாநக ராட்சி நிர்வாகம் தெரிவித்துள் ளது, பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மாநக ராட்சி நிர்வாகம் புதனன்று  முடி வை சொல்வதாக தெரிவித்துள் ளது” என்று கூறினார். தற்போது பணியில் இருந்து விலக்கப்பட்ட தொழிலாளர் களுக்கு பணியில் சேர்க்கப்பட்ட போது தகுதி  ஆவணங்கள் சரி யாக இல்லை என்று மாநகராட்சி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ள நிலையில் அப்படி ஆவணங்கள் இல்லாமல் யாரும் பணியில் சேர வில்லை. போதிய ஆவணங்க ளோடு தான் பணியில் சேர்க்கப் பட்டுள்ளார் .எனவே மாநகராட்சி ஆணையாளரிடம் தேவைப்பட் டால் பணியில் இருந்து இறக்கப் பட்ட தொழிலாளர்களின் ஆவ ணங்கள் காண்பிக்கப்படும். புத னன்று  நடைபெற்ற பேச்சுவார்த்தை யின் அடிப்படையில் வியாழ னன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். அதில் மாநக ராட்சி தரப்பில் நல்ல முடிவு எடுக் கப்படும் என்று தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.