districts

img

மதுரை கள்ளிக்குடியில் விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

மதுரை, ஜூலை 31- கன்னியாகுமரியிலி ருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த டிரெய்லர் லாரி  மீது மோதியதில் ஒரே குடும்  பத்தைச் சேர்ந்த மூன்று பேர்  உள்பட மூன்று பேர் உயிரி ழந்தனர். காரில் வந்தவர்கள் மதுரை வழியாகச் சென்னை  நோக்கிச் சென்று கொண்டி ருந்ததாகக் காவல்துறை யினர் தெரிவித்தனர். திங்கள்  கிழமை அதிகாலை 1.30 மணி யளவில் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே சென்று  கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில்  மோதி எதிர் திசையில் மது ரையிலிருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற டிரெய்லர் லாரி மீது மோதியுள்ளது. காவல்துறையின் முதற் கட்ட விசாரணையில் பலி யானவர்கள் காரில் பயணித்த ஜேம்ஸ் மார்ட்டின் (34), அவ ரது சகோதரர் ஜோம் டேவிட்  சன் (30) மற்றும் அவர்களது உறவினர் கமலேஷ் (54)  என அடையாளம் காணப்பட்  டது. ஜேம்ஸ் மார்ட்டின் வெளி நாட்டு துறைமுகத்தில் பணி புரிந்ததாகவும், ஆஸ்திரே லியாவிலிருந்து திரும்பி வந்துள்ளதாகவும் கூறப்படு கிறது. மேலும் பலியான டிரெய்  லர் லாரி ஓட்டுநர் மதுரை விர தானூரைச் சேர்ந்த எம்.செல்வகுமார் (29) என்பது தெரியவந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சிதைந்த வாகனங்களிலிருந்து உடல்  களை மீட்க ஒரு மணி நேரத்  துக்கும் மேலாகப் போராடிய தாகக் காவல்துறை துணைக்  கண்காணிப்பாளர் வசந்த குமார் கூறினார். விபத்தில் பலியான மூவ ரும் கன்னியாகுமரி மாவட் டம் மேக்காடு அடுத்த தெங்  கண்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.