districts

img

தோழர் கே.வரதராசன் 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திண்டுக்கல், மே 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் கே.வரதராஜன் 2ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திண்டுக்கல் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்றது.  நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்  டக்குழு உறுப்பினர்கள் வ.கல்யாண சுந்தரம், பி.ஆஸாத், அழகுராஜா, திண்  டுக்கல் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.  கொடைக்கானலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்டச் செய லாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் தா. அஜாய், முகேஷ், குருசாமி, ஜோசப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் சிபிஎம் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் தோழர் கே. வரதராசன் உருவப்படத்திற்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. பின்பு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎம் நகர் செயலாளர் எஸ்.காத்த முத்து தலைமையேற்றார். விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் வி.முரு கன் பேசினார். திருச்சுழி பகுதி தலை வர் பெருமாள், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எம்.கணேசன், சிஐடியு தலைவர் தமிழ்செல்வராஜ் உட்பட பலர் பங் கேற்றனர்.

தேனி

தேனி மாவட்டக்குழு அலுவல கத்தில் அன்னாரது உருவப்படத்திற்கு கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மூத்த தலைவர் கே.ராஜப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
 

;