மதுரை ரயில்வே கோட்டம் சார்பாக நவம்பர் 26 சனிக்கிழமையன்று அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை ரயில் இயக்க கட்டுப்பாட்டு அறை வளாகத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் தலைமையில் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.