மதுரை, மார்ச் 13- வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். அனைத்து வேளாண் வேலை பொருட்களை யும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். பொதுத்துறை நிறு வனங்களை தனியார் மயமாக்கு வதை நிறுத்த வேண்டும். பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும்.தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். மின்சார திருத்த மசோதா 2022-ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி மதுரை மாவட்டத்தில் சிஐ டியு, தமிழ்நாடு விவசாயிகள் சங் கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள சங்கம் சார்பில் 150 கி.மீ., நடைபயணம் திங்க ளன்று காலை துவங்கி மாலையில் நிறைவடைந்தது. இந்த நடைபய ணத்தில் 250-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் மாவட்டத்தில் அழகர்கோவில்-(பொய்கைகரைப்பட்டி, கள்ளந் திரி, அப்பன் திருப்பதி, சுந்தர் ராஜன்பட்டி, காதக்கிணறு, கடச்ச னேந்தல், புதுப்பட்டி விலக்கு), யா. நரசிங்கம், திருப்பரங்குன்றம்- (ஹார்விபட்டி, திருநகர், விளாச் சேரி, பிஆர்சி காலனி, தனக்கன் குளம்) தோப்பூர், சோழவந்தான்-(தேனூர் சமயநல்லூர்) பரவை, வன்னிவேலம்பட்டி- அத்திபட்டி, திருமங்கலம்- (குண்டுகுளம், சாத் தங்குடி , குண்ணங்குளம்) திருமங் கலம் இந்திரா காலனி ஆகிய ஊர் களில் பிரச்சாரம் நடைபெற்றது. அழகர்கோவிலில் நடைபய ணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். நடைபயணத் திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி. இளங்கோவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், ஆகி யோர் தலைமை வகித்தனர். நடை பயணத்தை சிஐடியு மாநகர் மாவட் டச் செயலாளர் இரா.லெனின் நிறைவு செய்து பேசினார்
திருப்பரங்குன்றத்தில் நடை பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. ராமகிருஷ்ணன் துவக்கி வைத் தார். பொன்.கிருஷ்ணன் (சிஐடியு), சொ.பாண்டியன் (விதொச), அய் யாவு (வி.ச.) ஆகியோர் தலைமை வகித்தனர். சோழவந்தானில் நடைபய ணத்தை மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே பொன்னுத் தாய் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் வேல்பாண்டி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன், மலை.கண்ணன், பொன்ராஜ் (சிஐ டியு) ஆகியோர் தலைமை வகித்த னர். பயணத்தை சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் இரா.தெய்வ ராஜ் நிறைவு செய்து பேசினார். வன்னிவேலம்பட்டியில் நடை பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் த.செல்லகண்ணு துவக்கி வைத்தார். மணிகிருஷ் ணன், கௌரி (சிஐடியு), முத்துக் கருப்பையா (வி.ச.). ஆறுமுகம் (விதொச) ஆகியோர் தலைமை வகித்தனர். திருமங்கலத்தில் நடைபய ணத்திற்கு சித்திரவேலு (சிஐடியு), விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.காசி ஆகி யோர் தலைமை வகித்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் உறுப்பினர் எஸ்.பாலா துவக்கி வைத்தார். நடைபயணத்தை சிஐ டியு மாவட்டத் துணைத் தலைவர் வி.பிச்சைராஜன் நிறைவு செய்து பேசினார். நடைபயணத்தில் பங்கேற்ற வர்கள், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதி ராக மதுரை மாநகர், மாவட்ட மக்க ளும் உள்ளார்கள் என்ற எதிர்ப்பை ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லி பேரணி யில் எதிரொலிக்க உள்ளனர்.