நத்தம், ஏப்.6- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி- புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தி யார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடை பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களி லிருந்து 550 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். பாதுகாப்பிற்காக டி.எஸ்.பி தலைமையில் 100க்கும் மேற் பட்ட காவல்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 25 பேர் காயமடைந்தனர்.