மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநில மாநாடு மார்ச் 30,31, ஏப்ரல் 1-ஆகிய நாள்களில் நடைபெற்றது. மாநில மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட வரவேற்புக்குழுவின் நிறைவு நிகழ்வு மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். நிகழ்விற்கு மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், சு.வெங்கடேசன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், மதுரை மத்தியப்பகுதிக்குழுச் செயலாளர் ஜீவா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.