districts

img

தோழர் பி.பெருமாள் 21 ஆம் நினைவு தினம்: தாமரைகுளம் நினைவிடத்தில் மலரஞ்சலி

நாகர்கோவில், ஏப்.30- கன்னியாகுமரி மாவட் டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க கால தலைவர்களுள் ஒருவரான தோழர் பி.பெருமாள் 21 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கன்னியா குமரி மாவட்ட குழுவின் சார்பில் தாமரை குளத்தில் உள்ள அன்னாரின் நினை விடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.நூர் முகமது, மாநி லக் குழு உறுப்பினர் ஆர். லீமாறோஸ், மூத்த தோழர் என். முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அகமது உசேன், எஸ்.அந்தோணி, என்.எஸ்.கண்ணன், வி.அனந்த சேகர், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகனன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.