districts

img

தோள்சீலை போராட்டத்தின் 200 ஆவது ஆண்டு விழா - கருத்தரங்கம்

தக்கலை, மார்ச் 28- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு தக்கலையில் ஞாயிறன்று (மார்ச் 28) தோள்சீலை போராட்டத்தின் 200ஆவது ஆண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவுக்கு கவிஞர் அரங்கசாமி தலலமை தாங்கினார். வரலாற்று  ஆய்வாளர் செந்தீ நடராஜன் தோள்சீலை போராட்ட வரலாறு குறித்து உரையாற்றினார். கவிஞர் திருவை சுஜாமி, சிறுகதை  எழுத்தாளர் மிகையிலான், வேணாடும் தமிழ் மரபும் ஆசிரியர் ஆன்றணி ஜோசப் உள்ளிட்டோர் பேசினர். பாடகர்கள் அறுகுவிளை சுப்பையா, றோஸ் றாபின், அருள் மனோ பாடல்கள் பாடினர். குமரித் தோழனின் இருதலை மிருகமும் ஓயாத  ஆட்டமும் என்ற நூலை கவிஞர் தக்கலை ஹலிமா வெளியிட்டார். கவிஞர் குமரி ஆதவன் பெற்றுக் கொண்டார். குமரித் தோழன் ஏற்புரையாற்றினார். தமுஎகச  மாவட்ட தலைவர் ஜெயகாந்தன், செயலாளர் ஹசன், சிஐடியு மாநில குழு உறுப்பினர் சந்திரகலா, ஓய்வு பெற்ற தலலமையாசிரியர் முரளிதரன் முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஷ், கலை இலக்கிய பெரு மன்ற மாநில பொறுப்பாளர் ஹாமிம் முஸ்தபா, அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சிவஸ்ரீ ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்