districts

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

விருதுநகர், ஜூன்.1-

    சாத்தூர் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த  வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவா ளிக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் மூன்றே மாதத்தில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையைச் சேர்ந்த வர் மணிகண்டன்(32). இவர் மனநலம் குன்றிய சிறுமியை கடந்த பிப்ரவரி 27 அன்று பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதையடுத்து, மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெரு மாள் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மேலும்  இந்த வழக்கானது, திரு வில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

   இந்நிலையில் வழக்கை ஜூன் 1அன்று விசாரித்த நீதிபதி, குற்றவாளி மணிகண்டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபரா தம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் 45 நாட்களில் குற்ற இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதி மன்றத்தில் குறுகிய காலத்தில் சாட்சிக ளை ஆஜர்படுத்தியதால் விரைவாக  குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.