districts

img

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தால் தேனியில் 2.15 லட்சம் பேர் பயன்பெற்றனர்

தேனி,பிப்.27- தமிழகத்தில் ஏழை, எளிய மக்க ளின் நலன் காக்கின்ற வகையில், உடல் நலத்தினை பேணிகாத்திடும் பொருட்டு, தமிழ்நாடு முதல மைச்சர்  மு.க.ஸ்டாலின் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறையின் மூலம் பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி, அதன் மூலம் பொது மக்களின் நலனை பாதுகாத்து வரு கிறார்கள்.  முதலமைச்சரால்  மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 05.08.2021 முதல் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.       இத்திட்டம் தேனி மாவட்டத்தில் 05.08.2021 முதல் தற்போது வரை கடமலை-மயிலாடும்பாறை, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம், வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், ஆண்டிபட்டி ஆகிய வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மூலம்  செவிலியர்கள், பிசி யோதெரபிஸ்ட், நோய் தடுப்பு பணி யாளர் செவிலியர், இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள், பல் நோக்கு சுகாதாரப் பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நோயா ளிகளின் இல்லங்களுக்கு நேரடி யாக சென்று சிகிச்சை அளிக்கப் பட்டு, வருவதன் அடிப்படையில், உயர் இரத்த அழுத்தம் தொடர் பான சிகிச்சை 85,168 நபர்களுக் கும், நீரிழிவு நோய் சிகிச்சை 41,991  நபர்களுக்கும், உயர் இரத்த அழுத் தம் மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சை 46,494 நபர்களுக்கும் நோய் தடுப்பு சிகிச்சை 16,485 நபர்களுக்கும், உடற்பயிற்சி சிகிச்சை 25,444 நபர்களுக்கும், டயா லிசிஸ் சிகிச்சை 17 நபர்களுக்கும் என மொத்தம் 2,15,599 நபர்கள் பய னடைந்துள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் பயனடைந்த உத்தம பாளையம் வட்டம், சின்னஓவுலா புரம் கிராமத்தைச் சேர்ந்த பொன் னையாசாமி  தெரிவிக்கையில்,    எனக்கு 81 வயது முதிர்வின் கார ணமாக சில மாதங்களுக்கு முன் ஒரு கை மற்றும் கால் (பக்க வாதம்) செயலிழந்தது மட்டுமல்லா மல், சுகர் மற்றும் பிரஷரால் பாதிக் கப்பட்டு வீட்டில் இருந்தபடி மருத்து வம் பார்த்து வந்தேன். போதிய வருமானம் இல்லாத காரணத்தி னால் சில நேரங்களில் மருத்துவம் பார்க்க பணமில்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தேன். இந்நிலையில்  முதல மைச்சர் மக்களை தேடி மருத்து வம் திட்டத்தினை செயல்படுத்தி யதன் மூலம் மருத்துவர்கள், செவி லியர்கள் எனது வீட்டிற்கே வந்து  மருத்துவப் பரிசோதனை மேற் கொண்டு, தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி வருவ தால், தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வரு கிறேன். எங்களைப் போன்ற வய தானவர்கள், ஏழை, எளிய மக்க ளின் நிலையினை கருத்தில் கொண்டு, மக்களைத் தேடி மருத்து வம் போன்ற பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி ஏழை, எளிய மக்களின் உயிரினை பாதுகாத்து வருகின்ற தமிழ்நாடு முதலமைச்ச ருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.  இத்தகவலை  தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், உதவி மக் கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார் ஆகியோர் தெரி வித்தனர்.