தூத்துக்குடி, மே 3- தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மரணம் அடைந்தவர்களின் வீட்டிற்கு சென்று அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி அண்ணா நகர் 3-ஆவது தெருவில் வசித்து வரு பவர் முத்துராமன். இவர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள கழிப்பறை யில் கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். இவ ரது மனைவி காளியம்மாள். இவர்களது மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா. கார்த்திகாவுக்கும் மார்த்தாண்டம் பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கடந்த 10 மாதத்திற்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. இந்நிலை யில், 9 மாத கர்ப்பிணியான கார்த்திகாவுக்கு வளைகாப்பு நடத்தி தூத்துக்குடி அண்ணா நகர் வீட்டுக்கு அழைத்து வந் துள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வீட்டின் மேற் கூரை மிகவும் பழுதடைந்ததால் தெர்மாகோல் சீலிங் அமைத் துள்ளனர். இதனால் கூரை மேலும் மோசமானது. இந்நிலையில், செவ்வா யன்று அதிகாலை இவர்கள் வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது அதிகாலை 4 மணியளவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடி பாடுகளில் சிக்கி தாய் மற்றும் கர்ப்பிணி மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். முத்து ராமன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். முத்துராமனின் தாயார் காலையில் சென்று பார்க்கும் போது மருமகள், பேத்தி வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பதையும், தனது மகன் காயங்களுடன் இருப்பதையும் கண்டு அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். அதனடிப்படையில் முத்து ராமனை மீட்டு அரசு தூத்துக் குடி மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். முத்துராமனின் மனைவி, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இதனையறிந்த சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச் சர் பெ.கீதாஜீவன் மாவட்ட ஆட்சி யர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சர வணன், மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு இடி பாடுகள் குறித்து கேட்டறிந்து முத்துராமனின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முத்துராமனை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு, அவ ருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்து வர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ.2 லட் சம் நிவாரண நிதியை அமைச்சர் வழங்கினார்.