தூத்துக்குடி, ஜூன் 30- தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பயிர்களுக்கு ரூ.19.13 கோடி இழப் பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழ னன்று காலை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவ சாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும் போது, தூத் துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப் பட்டன. அதன்படி 19 இடங்களில் அமைக் கப்பட்ட கொள்முதல் நிலையங்கள் மூலம் மொத்தம் 19 ஆயிரத்து 477டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு கூடுதலாக கொள்முதல் செய் யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட் டத்தில் கடந்த 2020-21 ராபி பயிர் களுக்கு காப்பீடு செய்ததில் ரூ. 19.13 கோடி இழப்பீட்டுத் தொகை இப்கோ - டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் 21950 விவசாயிகளின் வங்கிக் கணக் கில் செலுத்தப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரி கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் புவிராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.