17 வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஞாயிறன்று (டிச.26) மலர்வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியல் சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், நினைவுத்தூண் வடிவமைத்த கனகராஜ் கங்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.