districts

img

இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.12.60 கோடி கடனுதவி

இராமநாதபுரம், மே 29- இராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியத்துடன் ரூ.12.60 கோடி  கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று  ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரி வித்தார்.  தொழில் முனைவோர் தமிழக அரசு படித்த வேலை  வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்கி, தொழில்  முனைவோராக உருவாகும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தொழில் வணிக துறை யின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம்  படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கிட, புதிய தொழில் முனைவோர்களை உரு வாக்கிட அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி  மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி அளிக்கப்படு கிறது.

அதன்படி இராமநாதபுரம் மாவட்டத் தொழில் மையத்  தின் சார்பில் கடந்த ஒரு மாதத்தில் புதிய தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் எட்டு இளை ஞர்களுக்கு ரூ.3.93 கோடி கடனுதவி ரூ.1.19 கோடி மானி யத்துடன் வழங்கப்பட்டது. பரமக்குடி தொகுதியில் ஆறு  இளைஞர்களுக்கு ரூ.1.11 கோடி கடனுதவி ரூ.34 லட்சம்  மானியத்துடன் வழங்கப்பட்டது. திருவாடானை தொகுதியில் ஆறு இளைஞர்களுக்கு ரூ.2.27 கோடி கடனுதவி ரூ.50.89 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் தொகுதியில் ஏழு இளை ஞர்களுக்கு ரூ.1.60 கோடி கடனுதவி ரூ.57 லட்சம் மானி யத்துடன் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 இளைஞர்களுக்கு ரூ.8.91 கோடி கடனுதவி ரூ.2.61  கோடி மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உரு வாக்கும் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் தொகுதியில் 59 இளைஞர்களுக்கு ரூ.2.21 கோடி கடனுதவி ரூ.55 லட்சம் மானியம், பரமக்குடி தொகுதியில் 18 இளை ஞர்களுக்கு ரூ.73.12 லட்சம் கடனுதவி ரூ.18.28 லட்சம் மானி யம், திருவாடனை தொகுதியில் 11 இளைஞர்களுக்கு ரூ.42 லட்சம் கடனுதவி ரூ.10 லட்சம் மானியம், முது குளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒன்பது இளை ஞர்களுக்கு ரூ.32 லட்சம் கடனுதவி ரூ.8 லட்சம் மானியம்  என மொத்தம் 97 இளைஞர்களுக்கு ரூ.3.68 கோடி கடனு தவி ரூ.92 லட்சம் மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.  இந்தத் தகவலை இராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

;