districts

மதுரை முக்கிய செய்திகள்

12 கிலோ புகையிலை  பறிமுதல்: 2 பேர் கைது

திருச்சுழி, அக்.5- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தனியார் மில் குடியிருப்பில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற துணை  காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறை யினர் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தே கப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.  இதையடுத்து, அவர்களிடம் சோதனை செய்ததில், 12 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்ட றியப்பட்டது. எனவே, புகையிலையை பறிமுதல் செய்த காவல்  துறையினர், அப்பகுதியைச் சேர்ந்த ராஜ் (37), வெள்ளை யாபுரத்தைச் சேர்ந்த ஞானகுரு (34) ஆகியோரைக் கைது  செய்தனர்.

அரசு மருத்துவருக்கு இடையூறு  செய்தவர் மீது வழக்கு

விருதுநகர், அக்.5- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் பாண்டீஸ்வ ரன் பணியில் இருந்துள்ளார். அப்போது, அன்னக்கிளி என்பவரை கத்திக் குத்து காயத்துடன் அங்கு சிலர் கொண்டு வந்துள்ளனர். மருத்துவர் பாண்டீஸ்வரன் அவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.  அப்போது, உடன் வந்த காரியாபட்டி அருகே உள்ள  தாமரைக்குளத்தை சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் சிகிச்சையளிக்க விடாமல் இடையூறு செய்துள்ளார். எனவே, மருத்துவர் அவரை வெளியே இருக்கச் சொல்லி யுள்ளார். ஆனால், அவர் அதை கேட்காமல், மருத்து வரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்க வும் முயன்றுள்ளார். இதுகுறித்து மருத்துவர் பாண்டீஸ்வரன் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்  விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

மதுரை, அக்.5-  மதுரை பசுமலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயிற்சி மையத்தில் அரசு உத்தரவுப்படி தகவல்  அறியும் உரிமைச் சட்டம் 2005 - விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் மேலாண் இயக்குநர் ஆ.ஆறுமுகம் தலைமை யில் வியாழனன்று நடைபெற்றது. கூட்டத்தில் கல்வி அதிகாரி நடராஜன் விழிப்பு ணர்வு வகுப்பு நடத்தினார். மக்கள் தொடர்பு இணை  இயக்குநர் இரா.பாஸ்கரன், தொழில்நுட்பம்-கூட்டாண்மை பொது மேலாளர் சமுத்திரம், மனிதவள மேம்பாடு முதுநிலை துணை மேலாளர் ராமன், பொது மேலாளர் ராகவன், உதவி மேலாளர் முருகதாஸ் உட்பட  கிளை பொது தகவல் தொடர்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சீமைக்கருவேல மரங்களை அகற்ற விண்ணப்பிக்கலாம்

இராமநாதபுரம், அக்.5- இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 639 பொதுப்பணித்துறை கண்மாய், 4293 ஊராட்சிகள் கண்மாய், குளங்கள் ஆகியவற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை தூரோடு முழுவதுமாக அகற்றி அப்புறப்படுத்துவதற்கு ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஆர்வமுள்ளவர்கள் ஒற்றைச்சாளர (Single Window) முறையில் செயல்படும் https:// ramanathapuram.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பங்களை உரிய விதிமுறை களை பின்பற்றி பொது ஏலம் விடப்பட்டு விரைவில் உத்தரவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். '