districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரை: 56 அரசுப்பள்ளிகளில் 117 கூடுதல் வகுப்பறை கட்டப்படும்

மதுரை, ஆக.29- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில்  குழந்தைகள் நேயப் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.18.06 கோடி மதிப்பீட்டில் 56 அரசுப் பள்ளிகளில் 117 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்  கட்டப்பட உள்ளதாக மதுரை ஆட்சியர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்  துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், நமக்கு  நாமே திட்டம். ஊராட்சி ஒன்றிய பொது நிதி. கனிம நிதி,  சமூக பொறுப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் பள்ளிக்  கட்டடங்கள் கட்டுதல், கழிப்பறைகள், சமயலறை கூடங்கள் கட்டுதல், குடிநீர்ப் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல்  கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. கற்றல் கற்பித்தலுக்கு உகந்த சூழலை வழங்கு வதற்கும். மாணவர் வருகையை அதிகரிப்பதற்கும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கும் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வது அவசியம்.  அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.18.06 கோடி மதிப்பில் 56 அரசுப் பள்ளி களில் 117 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டு வதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதில் 11 திட்டப்பணிகள் செயலள வில் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள வகுப்பறைக் கட்ட டங்களுக்கான பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

பாஜக தலைவருக்குச் சால்வை அணிவிக்கச் சென்றவரிடம்  ரூ.25 ஆயிரம் அபேஸ்

அருப்புக்கோட்டை, ஆக.29- அருப்புக்கோட்டையில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குச் சால்வை  அணிவிக்கச் சென்ற முதியவரைத் தள்ளிக்கொண்டு போய் ரூ.25 ஆயிரத்தை “அபேஸ்” செய்ததாக மூன்று  பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள னர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஆக.9 ஆம் தேதி மாலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை ஊழல் எதிர்ப்புப் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது, அவருக்குச் சால்வை அணிவிப்பதற்காக தெற்குத் தெருவைச் சேர்ந்த தனபாலன்(63) என்பவர் சென்றுள்ளார். அப்போது, அவரை தள்ளிக் கொண்டு சென்ற மூன்று  பேர் தனபாலனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.25 ஆயி ரத்தை “அபேஸ்” செய்து விட்டார்களாம். இதுகுறித்து  தனபாலன் கொடுத்த புகாரின் பேரில் நகர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து மூன்றுபேரைத் தேடி வரு கின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் வந்த  கூட்டத்தினர் பணத்தை பிக்பாக்கெட் அடித்தார்களா? அல்லது வேறு யாரும் பணத்தைத் திருடிச் சென்றார் களா? என்பது மூன்று பேரும் பிடிபட்டால் தான் தெரிய வரும்.

மதுரை அல்-அமீன் பள்ளில் அறிவியல் கருத்தரங்கம்

மதுரை, ஆக.29- மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி யில் மதுரை மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வுக் கருத்த ரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் ஷே.ஷேக் நபி முன்னிலை  வகித்தார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத்  தலைவர் சுப.முருகானந்தம் தலைமை வகித்தார். பகுத்த றிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு கருத்தரங்கை துவக்கி வைத்தார். நா.மணிகண்டன் வரவேற்றார். பேரா சிரியர் மு.சு.கண்மணி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை வளரவேண்டும் ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  நிகழ்வில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப் பொறுப்பா ளர்கள் வே.செல்வம், அ.முருகானந்தம், இரா.காசி, இரா. லீ.சுரேசு, மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட னர். உதவித்தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன் மற்றும்  ரஹ்மத்துல்லா நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்தி ருந்தனர். 

விருதுநகர் அருகே கிணற்றிலிருந்த மோட்டார், பம்ப் செட் மாயம்

விருதுநகர், ஆக.29- விருதுநகர் அருகே கிணற்றிலிருந்த விவசாய பம்ப் செட், மோட்டாரை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்  சென்றுவிட்டனர். விருதுநகர் அருகே உள்ள நடையனேரியைச் சேர்ந்த வர் சதீஷ்குமார்(52). விவசாயி. இவருக்குச் சொந்த மான தோட்டம் அழகாபுரி சாலையில் உள்ளது. சம்ப வத்தன்று, வழக்கம் போல அதிகாலை தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மின்மோட்டார் மற்றும் பம்ப் செட் ஆகியவற்றை அடையாளம் தெரி யாத நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு  செய்து விசாரிக்கின்றனர்.

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் இருவர் கைது

விருதுநகர், ஆக.29- விருதுநகர் அருகே ரேஷன் அரிசியைக் கடத்திய இரு வரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் வடமலைக் குறிச்சி விலக்கு அருகே ரேஷன் பொருட்கள் தடுப்பு சிறப்பு  வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் வாகனச்  சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனர். அதில், 800 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.  அரிசி-வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறை யினர், கடத்தலில் ஈடுபட்ட ஹரிகிருஷ்ணன் (50), பாண்டிய ராஜன் (22) ஆகியோரைக் கைது செய்தனர்.

அலுவலகங்கள் தோறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடத்த அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

மதுரை, ஆக. 29-  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரை  மாவட்ட மாற்று(ம்)த் திறனாளிகள் துணைக்குழு அமைப்புக் கூட்டம் மதுரையில் மாவட்டத்தலைவர் ஜெ.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட  இணைச்செயலாளர் மு.ராம்தாஸ், மாவட்டச்செய லாளர் க.நீதிராஜா. மாவட்டப் பொருளாளர் க. சந்திர போஸ் மாநிலத் துணைத் தலைவர் மொ.ஞானத் தம்பி, மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், அரசுப் பணி நியமனங்க ளில் மாற்றுத்திறனாளிக்கான இட ஒதுக்கீட்டை முழு மையாக நிரப்ப வேண்டும். அரசு அச்சகம் அருகே உள்ள சாலையில் ஏற்க னவே இருந்த வேகத்தடை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். அரசு அச்சகத்தின் முன் சாலையில் இரு புறங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அதிகம் பணிபுரி யும் இடம் வாகனங்கள் மெதுவாகச் செலவும் என எச்ச ரிக்கை பலகை வைக்க வேண்டும். அரசு ராஜாஜி மருத்துவமனையில் மத்திய ஆய்வ கத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகை யில் நவீனக் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு  அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்  படுத்துவதற்கு ஏதுவாக சாய்வு தளம் ஏற்படுத்த  வேண்டும். மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு அலு வலகத்திலும் மாதம் தோறும் மாற்றுத்திறனாளியின் குறைகளைக் களைய குறை கேட்புக்கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்பன உள்  ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆர்.ராஜா (ஆய்வக நுட்புநர், மதுரை  மருத்துவக்கல்லூரி), சுப்ரமணி (அரசு அச்சகம்), எஸ்.சுந்தரமூர்த்தி (தட்டச்சர், தொழிலாளர் நலத்துறை), கே.சாரதா (சத்துணவு அமைப்பாளர், மேற்கு ஒன்றியம்) ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் துணைக்குழு அமைப்பாளர்களாகவும் 13 துணைக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.