தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 79 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.1.77 கோடி மதிப்பிலான அரசின் மானியத் தொகை வழங்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியர் க.வீ.முரளீதரன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.