நாகர்கோவில், மார்ச் 6- கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பி லான ஆக்கிரமிப்பு நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 3 சென்ட் நிலம் தாழக்குடி கிராமத்தில் உள்ளது. இந்நிலத் தை தனிநபர் ஆக்கிரமித்து அனு பவித்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து திருச்செந் தூர் திருக்கோவில்களின் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் உதவி ஆணையர் வெங்கடேஷ், கட்டளை கண்கா ணிப்பாளர் அய்யர் சிவமணி, கோவில் பணியாளர்கள் ஜெயந்திநாதன், கணேசன் ஆகியோர் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு அவ்விடத்தில் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தனர்.